sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அறவழியில் போராடும் ஆசிரியர்கள் ஆடையை கிழித்து அடக்குமுறையா? தமிழக அரசுக்கு ஆசிரியர் பேரவை கண்டனம்

/

அறவழியில் போராடும் ஆசிரியர்கள் ஆடையை கிழித்து அடக்குமுறையா? தமிழக அரசுக்கு ஆசிரியர் பேரவை கண்டனம்

அறவழியில் போராடும் ஆசிரியர்கள் ஆடையை கிழித்து அடக்குமுறையா? தமிழக அரசுக்கு ஆசிரியர் பேரவை கண்டனம்

அறவழியில் போராடும் ஆசிரியர்கள் ஆடையை கிழித்து அடக்குமுறையா? தமிழக அரசுக்கு ஆசிரியர் பேரவை கண்டனம்

2


ADDED : டிச 29, 2025 04:52 AM

Google News

2

ADDED : டிச 29, 2025 04:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: சென்னையில் சமவேலைக்கு சமஊதியம் கோரிக்கையை வலியுறுத்தி அறவழியில் போராடும் இடைநிலை ஆசிரியர்களின் ஆடையை கிழித்து போலீசார் மூலம் அடக்குமுறையை ஏவிவிடும் தி.மு.க., அரசுக்கு தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மதுரையில் பேரவை மாநில தலைவர் ஆரோக்கியதாஸ் கூறியதாவது: தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்த 'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற இடைநிலை ஆசிரியர்களுக்கான வாக்குறுதியை நான்கரை ஆண்டுகளாக நிறைவேற்றவில்லை. பாதிக்கப்பட்ட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பலமுறை போராடியும் பயன் இல்லை.

அவர்கள் முறைப்படி அறிவிப்பு வெளியிட்டு, மாணவர்கள் கல்வி பாதிக்கக் கூடாது என்பதை கருதி விடுமுறையில் அறவழியில் போராட்டத்தை துவக்கியுள்ளனர். அவர்கள் மீது போலீசாரை கொண்டு அடக்குமுறையையும், வன்முறையையும் ஆளுங்கட்சி கட்டவிழ்த்து விடுகிறது. இதுதொடர்பான வீடியோ வைரலாகும் காட்சியில் ஆசிரியர்களின் ஆடைகளை கிழிக்கும் போலீசாரின் செயல் ஜனநாயக விரோதமானது. கடும் கண்டனத்துக்கு உரியது.

இதுபோல் 2016, 2021 என 2 சட்டசபை தேர்தல்களின்போதும் தேர்தல் வாக்குறுதி தந்து விட்டு ஆட்சிகள் நிறைவடையும் போதும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை. இடைநிலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை களைய மூவர் குழு அமைத்தது. அதுவும் ஏமாற்று நாடகம் என அம்பலமாகி உள்ளது. ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்க பிரதிநிதிகளிடம் கருத்து கேட்பு என்ற பெயரில் இந்த அரசு காலம் கடத்தியது. இடைநிலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு கோரிக்கை நியாயமானது.

தற்போதைய தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ், ஆசிரியர் சங்கங்களிடையே பாகுபாடு காட்டுகிறார். ஆசிரியர்களின் நலனுக்கு எதிராக செயல்படுகிறார். சம்பள முரண்பாட்டை களைய குழு அமைத்து, 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இயக்குநர் என்ற அடிப்படையில் அரசுக்கு உரிய கருத்துருவை வழங்காமல் காலம் தாழ்த்தியதும் கண்டிக்கத்தக்கது. அடக்குமுறையை கைவிட்டு இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின் உடனே நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us