sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தில் நடப்பது போலீஸ் ஆட்சியா: கேட்கிறார் அன்புமணி

/

தமிழகத்தில் நடப்பது போலீஸ் ஆட்சியா: கேட்கிறார் அன்புமணி

தமிழகத்தில் நடப்பது போலீஸ் ஆட்சியா: கேட்கிறார் அன்புமணி

தமிழகத்தில் நடப்பது போலீஸ் ஆட்சியா: கேட்கிறார் அன்புமணி

3


ADDED : ஜன 15, 2025 10:55 AM

Google News

ADDED : ஜன 15, 2025 10:55 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா? போலீஸ் ஆட்சியா? என பா.ம.க., தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.

அவரது அறிக்கை: விழுப்புரம் மாவட்டம் அரசூர் கூட்டு சாலை என்ற இடத்தில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், போலீசாரின் அத்துமீறலைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் இருவேல்பட்டு கிராம மக்கள் மீது போலீசார் கடுமையாக அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை ஆண் போலீசார் அவமானப்படுத்தும் வகையில் இழுத்துச் சென்று அப்புறப்படுத்தியுள்ளனர். வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த அப்பாவி இளைஞர்களையும் போலீசார் பயங்கரவாதிகளை போல இழுத்துக் கொண்டு சென்றுள்ளனர். இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்துவதில் கூட தவறு இல்லை. ஆனால், கலைந்து சென்ற மக்களை பயங்கரவாதிகளைப் பிடிப்பதைப் போல போலீசார் வேட்டையாடியதை மன்னிக்க முடியாது. தி.மு.க.,வை ஆட்சியில் அமர்த்தியவர்கள் மக்கள் தான். இத்தகைய நிகழ்வுகளைப் பார்க்கும் போது தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா, போலீஸ் ஆட்சியா? என்ற ஐயம் தான் எழுகிறது. இவற்றுக்கெல்லாம் மக்கள் பாடம் புகட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை. இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us