sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஒரு பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை உங்களுக்கு மேடை நகைச்சுவையா? * அப்பாவுவுக்கு அண்ணாமலை கண்டனம்

/

ஒரு பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை உங்களுக்கு மேடை நகைச்சுவையா? * அப்பாவுவுக்கு அண்ணாமலை கண்டனம்

ஒரு பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை உங்களுக்கு மேடை நகைச்சுவையா? * அப்பாவுவுக்கு அண்ணாமலை கண்டனம்

ஒரு பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை உங்களுக்கு மேடை நகைச்சுவையா? * அப்பாவுவுக்கு அண்ணாமலை கண்டனம்


ADDED : ஜன 21, 2025 06:28 PM

Google News

ADDED : ஜன 21, 2025 06:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'ஒரு பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் கொடுமை உங்களுக்கு மேடை நகைச்சுவையா' என, சபாநாயகர் அப்பாவுவுக்கு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

சமீபத்தில் ஒரு விழாவில் பங்கேற்ற சபாநாயகர் அப்பாவு, அங்கிருந்த ஞானசேகரன் என்ற நபரை கேலி செய்ய, அண்ணா பல்கலை பாலியல் குற்றவாளி ஞானசேகரனை குறிப்பிட்டு, 'தம்பி ஞானசேகரன்' என்று பேசியுள்ளார். தி.மு.க., நிர்வாகியாயிற்றே பாசம் இருக்க தானே செய்யும்.

தன்னை அறியாமல், அதை வெளிப்படுத்தி இருக்கிறார் அப்பாவு. பாலியல் குற்றவாளியான தி.மு.க., நிர்வாகி ஞானசேகரனுக்கு பக்க பலமாக இருந்த, அந்த, 'சார்' யாரென்று, இன்று வரை காவல் துறை கண்டுபிடிக்கவில்லை.

தமிழக அரசு, இந்த வழக்கை நேர்மையாக விசாரிக்கிறதா என்ற சந்தேகம், மக்கள் மத்தியில் இருக்கும் நிலையில், ஒரு பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் கொடுமை, உங்களுக்கு மேடை நகைச்சுவையா அப்பாவு?

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அண்ணாமலையின் மற்றொரு அறிக்கை:


தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளை காக்க வைத்து, அதன்பின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறோம் என்ற பெயரில் நாடகமாடி கொண்டிருக்கின்றனர். ஆண்டுதோறும் சம்பா பயிர் அறுவடை காலத்தில், பருவ மழை பெய்வதால், நெல்லின் ஈரப்பதம் அதிகரிப்பது வழக்கமான ஒன்று. இதற்கு நிரந்தர தீர்வு காண, கடந்த நான்கு ஆண்டுகளாக தி.மு.க., அரசு, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த ஆண்டு விவசாய பட்ஜெட்டில், 50 சதவீத மானியத்தில் நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரம் வாங்க, 90 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்வதாக அறிவித்த தி.மு.க., அரசு, அதன்பின் அதுகுறித்து பேசவே இல்லை.
நெல் உலர்த்தும் இயந்திரம் வாங்க, 50 சதவீதம் மானியம் மட்டும் கொடுத்தால், மீதமுள்ள நிதிக்கு, சிறு, குறு விவசாயிகள் எங்கே செல்வர்?ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் தொகுதி மேம்பாட்டு நிதியாக ஆண்டுக்கு, 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. டெல்டா மாவட்டங்களில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் இந்த நிதியை என்ன செய்கின்றனர்?
ஏன் விவசாயிகளுக்கு இத்தனை ஆண்டுகளாக நெல் உலர்த்தும் இயந்திரம் வாங்கி தரவில்லை. கொள்ளை அடிக்கும் பணத்தில் ஆண்டுக்கு, 10 நெல் உலர்த்தும் இயந்திரங்கள் வாங்கி கொடுக்கலாமே. விவசாயிகள் எதிர்கொள்ளும் ஈரப்பத பிரச்னை, இந்த ஆண்டே இறுதியாக இருக்கட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us