ஒரு பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை உங்களுக்கு மேடை நகைச்சுவையா? * அப்பாவுவுக்கு அண்ணாமலை கண்டனம்
ஒரு பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை உங்களுக்கு மேடை நகைச்சுவையா? * அப்பாவுவுக்கு அண்ணாமலை கண்டனம்
ADDED : ஜன 21, 2025 06:28 PM
சென்னை:'ஒரு பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் கொடுமை உங்களுக்கு மேடை நகைச்சுவையா' என, சபாநாயகர் அப்பாவுவுக்கு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
சமீபத்தில் ஒரு விழாவில் பங்கேற்ற சபாநாயகர் அப்பாவு, அங்கிருந்த ஞானசேகரன் என்ற நபரை கேலி செய்ய, அண்ணா பல்கலை பாலியல் குற்றவாளி ஞானசேகரனை குறிப்பிட்டு, 'தம்பி ஞானசேகரன்' என்று பேசியுள்ளார். தி.மு.க., நிர்வாகியாயிற்றே பாசம் இருக்க தானே செய்யும்.
தன்னை அறியாமல், அதை வெளிப்படுத்தி இருக்கிறார் அப்பாவு. பாலியல் குற்றவாளியான தி.மு.க., நிர்வாகி ஞானசேகரனுக்கு பக்க பலமாக இருந்த, அந்த, 'சார்' யாரென்று, இன்று வரை காவல் துறை கண்டுபிடிக்கவில்லை.
தமிழக அரசு, இந்த வழக்கை நேர்மையாக விசாரிக்கிறதா என்ற சந்தேகம், மக்கள் மத்தியில் இருக்கும் நிலையில், ஒரு பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் கொடுமை, உங்களுக்கு மேடை நகைச்சுவையா அப்பாவு?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.