ADDED : ஜூலை 02, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மடப்புரத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித்குமாரை, கம்புகளால் போலீசார் சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் சுற்றி நின்று அஜித்குமாரை தாக்கும் காட்சிகள், அதில் இடம் பெற்றுள்ளன. இதை ஜன்னல் வழியாக ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ எடுத்தவர் நேற்று மதியம் 3:00 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் வீடியோ வெளியிட்டவருக்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.