sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

எந்த கொம்பனாலும் குறைசொல்ல முடியாத திராவிட மாடல் ஆட்சி இதுவா? தி.மு.க.,வுக்கு சீமான் கேள்வி

/

எந்த கொம்பனாலும் குறைசொல்ல முடியாத திராவிட மாடல் ஆட்சி இதுவா? தி.மு.க.,வுக்கு சீமான் கேள்வி

எந்த கொம்பனாலும் குறைசொல்ல முடியாத திராவிட மாடல் ஆட்சி இதுவா? தி.மு.க.,வுக்கு சீமான் கேள்வி

எந்த கொம்பனாலும் குறைசொல்ல முடியாத திராவிட மாடல் ஆட்சி இதுவா? தி.மு.க.,வுக்கு சீமான் கேள்வி

12


ADDED : நவ 20, 2024 10:24 PM

Google News

ADDED : நவ 20, 2024 10:24 PM

12


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு,தி.மு.க., ஆட்சியை அகற்றுவதுதான் ஒரே வழி என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியை ரமணி பட்டப்பகலில் பள்ளி வளாகத்திலேயே படுகொலை செய்யப்பட்டுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது. அந்த செய்தி தந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் அடுத்த அதிர்ச்சியாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வக்கீல் கண்ணன் மீது கொடூரமாக கொலைவெறி தாக்குதல் நடத்தப்படும் காட்சிகள் மனதைக் கொதிக்கச் செய்கிறது.

தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர், அரசு டாக்டர், அரசுப்பள்ளி ஆசிரியர், வக்கீல் என்று பட்டப்பகலில் அடுத்தடுத்து நிகழும் கொலைவெறித் தாக்குதல்கள் யாவும் தி.மு.க., ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு என்று ஒன்று இருக்கிறதா என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. தி.மு.க., ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கே இந்த நிலைமை என்றால், பாமர மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்க முடியும்? தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா? அல்லது சமூக விரோதிகளின் ஆட்சி நடைபெறுகிறதா? என்ற கேள்வியை ஒவ்வொரு மக்களுக்குள்ளும் எழுப்புகிறது.

தமிழகத்தில் சாதியத் தீண்டாமை கொடுமைகள், ஆணவப் படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகள், அரசியல் தலைவர்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை பட்டப்பகலில் நாள்தோறும் நிகழும் படுகொலைகள், பெருகி ஓடும் கள்ளச்சாராயம், கட்டுக்கடங்காத கஞ்சா புழக்கம் என தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்ப முடியாத கொடுஞ்சூழல் நிலவுகிறது. மக்கள் வாழவே தகுதியற்ற நிலமாக தமிழகத்தினை தி.மு.க., அரசு மெல்ல மெல்ல மாற்றி வருகிறது. முதல்வரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழகத்தின் காவல்துறை முற்றிலும் செயலிழந்த துறையாகிவிட்டது. இந்த கொடூர கொலைகள் நடைபெறும் ஆட்சிதான் எந்த கொம்பனாலும் குறைசொல்ல முடியாத திராவிட மாடல் ஆட்சியா?

ஒவ்வொரு நாளும் அடுத்தடுத்து நிகழும் படுகொலைகள் யாவும் தி.மு.க.,வை ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்றுவதே தமிழகத்தில் மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான ஒரே வழி என்பதையே உணர்த்துகிறது!, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us