sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 18, 2025 ,மார்கழி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 'ஜால்ரா அடித்துதான் பதவியில் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை'

/

 'ஜால்ரா அடித்துதான் பதவியில் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை'

 'ஜால்ரா அடித்துதான் பதவியில் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை'

 'ஜால்ரா அடித்துதான் பதவியில் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை'


ADDED : டிச 18, 2025 06:24 AM

Google News

ADDED : டிச 18, 2025 06:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''ஜால்ரா அடித்துதான், ஒரு பதவியில் இருக்க வேண்டும் என்றால் , அந்த பதவி தேவையில்லை,'' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி: பிரதமர் மோடி, 2014ல் ஆட்சிக்கு வந்ததும், 'துாய்மை இந்தியா' திட்டத்திற்கு, காந்தி பெயரை வைத்தார். அவர், பல இடங்களில், காந்தி பெருமையை உயர்த்தி பிடித்து வருகிறார். தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை, 150 நாட்களாக உயர்த்துவோம் என, வாக்குறுதி அளித்தது; இதை தி.மு.க., நிறைவேற்றவில்லை.

இதை கேள்வி கேட்க காங்.,குக்கு வக்கில்லை. அண்ணாமலை என்கிற இந்த நாயின் வாலை நிமிர்த்த முடியாது. இது, அப்படி தான் இருக்கும். ஏனெனில், உண்மையை மட்டும் பேசும் நாய். இது, ஜால்ரா அடிக்கிற நாய் கிடையாது.

இன்று ஒரு கட்சியில் சேர்ந்து, சினிமா நடிகருக்கு ஜால்ரா அடிக்கிற நாய் கிடையாது. அந்த நாய் வால் கொஞ்சம் வளைந்து தான் இருக்கும். மோடிக்கு, மக்களுக்கு நன்றியுள்ள விசுவாசமான நாய் இது.

சினிமா நடிகருக்கு ஜால்ரா அடிக்க, நான் அரசு பதவியை ராஜினாமா செய்யவில்லை. உன்னதமான கோட்பாட்டிற்காக வந்திருக்கிறேன். ஜால்ரா அடித்து தான், ஒரு பதவியில் இருக்க வேண்டும் என்றால், அந்த பதவி எனக்கு தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us