sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 20, 2025 ,மார்கழி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'ஆர்டர்லி'யாக ஒருவர் கூட இல்லை என்பதை ஏற்க முடியவில்லை: ஐகோர்ட்

/

'ஆர்டர்லி'யாக ஒருவர் கூட இல்லை என்பதை ஏற்க முடியவில்லை: ஐகோர்ட்

'ஆர்டர்லி'யாக ஒருவர் கூட இல்லை என்பதை ஏற்க முடியவில்லை: ஐகோர்ட்

'ஆர்டர்லி'யாக ஒருவர் கூட இல்லை என்பதை ஏற்க முடியவில்லை: ஐகோர்ட்

2


UPDATED : டிச 20, 2025 11:41 AM

ADDED : டிச 20, 2025 06:43 AM

Google News

2

UPDATED : டிச 20, 2025 11:41 AM ADDED : டிச 20, 2025 06:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'தமிழகத்தில் காவல் துறை உயர் அதிகாரிகள் வீடுகளில், 'ஆர்டர்லி'களாக ஒருவர் கூட பணியில் இல்லை என, டி.ஜி.பி., கூறுவதை ஏற்க முடியவில்லை' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோவில் தொடர்பாக வழக்கு தொடரும் சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர், தனக்கு பாதுகாப்பு வழங்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது, 'தமிழகத்தில் 'ஆர்டர்லி' முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்' என, கடந்த 2022ம் ஆண்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

'இந்த உத்தரவு முழுமையாக பின்பற்றப்பட்டதா' என, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் அடங்கிய அமர்வு, வழக்கு விசாரணையின்போது கேள்வி எழுப்பியது. இதற்கு, 'காவல் துறை உயர் அதிகாரிகள் வீடுகளில், ஆர்டர்லிகளாக தற்போது யாரும் இல்லை' என, டி.ஜி.பி., சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு, எஸ்.எம். சுப்ரமணியம் , சி.குமரப்பன் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: ஆர்டர்லிகளாக யாரையும் பணியில் வைத்திருக்கக் கூடாது என, டி.ஜி.பி., சுற்றறிக்கை அனுப்பியதை பாராட்டுகிறோம்.

அதே வேளையில், ஆர்டர்லிகளாக சீருடை காவலர்கள் பணியாற்றி வருவதாக, நாளிதழ்களிலும், பொதுத்தளத்திலும் தகவல்கள் வரும் நிலையில், ஆர்டர்லிகளாக யாரும் இல்லை என டி.ஜி.பி., கூறுவதை ஏற்க முடியவில்லை. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

அதற்கு பதிலளித்த தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, ''ஆர்டர்லி பணியில் இருப்பது தொடர்பாக புகார் எதுவும் வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கில் தமிழக அரசின் தலைமை செயலர் மற்றும் உள்துறை செயலர் ஆகியோரை இணைத்து உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கில் அட்வகேட் ஜெனரல் நீதிமன்றத்துக்கு உதவ வேண்டும் என கூறி, வழக்கை ஜனவரி 7ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.






      Dinamalar
      Follow us