sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நிவாரண ஆணையை திருப்பி தந்தவர் பல்டி

/

நிவாரண ஆணையை திருப்பி தந்தவர் பல்டி

நிவாரண ஆணையை திருப்பி தந்தவர் பல்டி

நிவாரண ஆணையை திருப்பி தந்தவர் பல்டி


ADDED : மார் 05, 2024 06:20 AM

Google News

ADDED : மார் 05, 2024 06:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாடுதுறையில் நேற்று நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை சார்பில், இயற்கை இடர்பாடுகளால் சேதமான விசைப்படகிற்கு, சுழல் நிதியிலிருந்து, 2 லட்சம் ரூபாய் நிவாரண நிதிக்கான ஆணையை, சீர்காழி தாலுகா பூம்புகாரை சேர்ந்த ரமேஷ் என்ற பயனாளிக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

அந்த நிவாரண ஆணையை ரமேஷ், முதல்வரிடமே திருப்பிக் கொடுத்தார். அவர் வாங்காததால் அருகில் இருந்த அமைச்சர் வேலுவிடம் கொடுத்தார். அவரும் வாங்க மறுத்ததால், பக்கத்தில் இருந்த அமைச்சர் கே.கே.எஸ்.ஆர். ராமச்சந்திரனிடம் கொடுத்து விட்டு சென்றார்.

நிவாரணத்தொகை குறைவாக இருந்ததால், முழு தொகையையும் வழங்குமாறு கூறி, ஆணையை திருப்பிக் கொடுத்து விட்டு சென்றதாக கூறப்பட்டது. தொடர்ந்து மேடையை விட்டு இறங்கிய ரமேஷை போலீசார் அழைத்துச் சென்று நீண்ட நேரம் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, மாலையில் செய்தியாளர்களை சந்தித்த ரமேஷ், ''நான் பரம்பரை தி.மு.க.,காரன். முதல்வர் வழங்கிய நிவாரண ஆணையில் பெயர் மாறி இருந்ததால், திருப்பிக் கொடுத்தேன். வேறு எந்த காரணமும் இல்லை. படகு மூழ்கியதற்கு நிவாரணத் தொகை வழங்கிய முதல்வருக்கு நன்றி,'' என்றார்.

நிவாரண ஆணையை திருப்பிக் கொடுத்து விட்டு, அதிகாரிகள் விசாரணைக்கு பின், தி.மு.க.,வினர் முன்னிலையில் மீனவர் பல்டி அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நிவாரண ஆணையை திருப்பி தந்தவர் பல்டி








      Dinamalar
      Follow us