sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சும்மா இருப்பது ரொம்ப கடினம்; சென்னை திரும்பிய தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் 'ஓபன் டாக்'

/

சும்மா இருப்பது ரொம்ப கடினம்; சென்னை திரும்பிய தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் 'ஓபன் டாக்'

சும்மா இருப்பது ரொம்ப கடினம்; சென்னை திரும்பிய தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் 'ஓபன் டாக்'

சும்மா இருப்பது ரொம்ப கடினம்; சென்னை திரும்பிய தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் 'ஓபன் டாக்'

18


ADDED : டிச 19, 2024 11:10 AM

Google News

ADDED : டிச 19, 2024 11:10 AM

18


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'இனி சிறிது நாட்களுக்கு எதுவும் செய்யாமல் சும்மா இருக்க வேண்டும். சும்மா இருப்பது தான் மிகவும் கஷ்டமான விஷயம்' என தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்தார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த பின் சென்னை திரும்பினார் அஸ்வின். அவரை விமான நிலையத்தில் அவரது குடும்பத்தினர் வரவேற்றனர். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: எல்லோருக்கும் நன்றி. இவ்வளவு பேர் வருவீர்கள் என்று நான் எதிர்பார்க்க வில்லை. நான் வந்து அப்படியே வீட்டில் போய் உட்கார்ந்து கொள்ளலாம் என்று நினைத்தேன். என்னை வரவேற்க வந்த அனைவருக்கும் நன்றி. 3வது டெஸ்ட்டின் 4ம் நாளில் ஓய்வு முடிவை எடுத்தேன்.



எனது பயணம்

அடுத்து ஏதும் திட்டமில்லை. அடுத்த பயணத்தை இனிமேல் தான் துவங்க வேண்டும். இனி சிறிது நாட்களுக்கு எதுவும் செய்யாமல் சும்மா இருக்க வேண்டும். சும்மா இருப்பது தான் மிகவும் கஷ்டமான விஷயம். கிரிக்கெட்டில் எனது பயணம் தொடர்ந்து இருக்கும். கிரிக்கெட் வீரர் அஸ்வின் முடிந்துவிட்டார் என்று நான் நினைக்கவில்லை. இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் முடிந்துவிட்டார் என்று தான் நினைக்கிறேன். சி.எஸ்.கே., அணிக்காக என்னால் முடிந்த வரை விளையாடுவேன். எனக்கு துளியும் கூட வருத்தமே இல்லை. இவ்வாறு அஸ்வின் கூறினார்.






      Dinamalar
      Follow us