sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இது உங்கள் இடம்: சோரன் வழியில் செல்வாரா கெஜ்ரிவால்?

/

இது உங்கள் இடம்: சோரன் வழியில் செல்வாரா கெஜ்ரிவால்?

இது உங்கள் இடம்: சோரன் வழியில் செல்வாரா கெஜ்ரிவால்?

இது உங்கள் இடம்: சோரன் வழியில் செல்வாரா கெஜ்ரிவால்?


ADDED : பிப் 05, 2024 12:16 AM

Google News

ADDED : பிப் 05, 2024 12:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலக, தேசிய, தமிழக நடப்புகள் குறித்து தினமலர் நாளிதழுக்கு வாசகர்கள் எழுதிய கடிதம்


எஸ். சின்னராசு டேவிட், தென்காசியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

கடந்த சில நாட்களாக நாட்டையே உலுக்கிக் கொண்டிருந்த இரு வதந்திகளில், ஒன்று முடிவுக்கு வந்துள்ளது; மற்றொன்று எப்போது முடிவுக்கு வரும் என தெரியவில்லை.

அதாவது, புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகிய இருவரும் ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால், சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.

ஆனால், இருவரும் விசாரணைக்கு ஆஜராகாமல், 'டிமிக்கி' கொடுத்து, அமலாக்கத்துறையையும், மத்திய அரசை யும் வசைபாடிக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில், இருவரும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படலாம் என்ற தகவல் உலா வரவே, உடனடியாக இருவேறு வதந்திகள் றெக்கை கட்டி பறந்தன...

அதாவது, ஹேமந்த் சோரன் கைதானால், அவர் வகித்த முதல்வர் பதவியை, அவரது மனைவி கல்பனா சோரனும், அரவிந்த் கெஜ்ரிவால் கைதானால், அவரது பதவியை அவரது மனைவி சுனிதாவும் வகிப்பர் என்பது தான் அந்த வதந்திகள்.

ஆனால், நல்ல வேளையாக, கல்பனாவை முதல்வராக்காத சோரன், சம்பாய் சோரனை முதல்வராக்கி விட்டு, சிறைக்கு சென்றிருக்கிறார்.

முதல்வர் பதவியில் இருந்து ஒருவர் விலகினால், அந்த இடத்தில் மனைவியை அமர வைக்கும் அவலம், முதலில் தமிழகத்தில் தான் துவங்கியது.

கடந்த 1969ல், முதல்வராக இருந்த அண்ணாதுரை காலமானபோது, அவரது மனைவி ராணி முதல்வராகவில்லை; நெடுஞ்செழியன் தான் தற்காலிக முதல்வரானார். அடுத்து, முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., 1987ல் மறைந்த போது தான் பிரச்னை துவங்கியது.

எம்.ஜி.ஆர்., இடத்தில் வலுக்கட்டாயமாக அவரது மனைவி ஜானகியை, முதல்வர் பதவியில் அமர்த்தினர். ஆனால் ஜெ., அணியால், அவரது ஆட்சி, எண்ணி 24 நாட்களில் கவிழ்ந்தது.

அடுத்து, பீஹாரின் லாலு பிரசாத் யாதவ் மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றதால், சமையலறையில் சப்பாத்தி சுட்டுக் கொண்டிருந்த மனைவி ரப்ரி தேவியை முதல்வராக்கி விட்டு, சிறைக்கு சென்றார்.

டில்லி முதல்வர் கெஜ்ரிவாலின் கதை என்னவென்று இன்னும் தெரியவில்லை. ஒருவேளை அவர் சிறைக்கு சென்றால், ஹேமந்த் சோரன் வழியை பின்பற்றி, தன் கட்சியின் மூத்த தலைவரை முதல்வர் பதவியில் அமர்த்த வேண்டும்.








      Dinamalar
      Follow us