sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஜல்லிக்கட்டுக்கு ரெடியாகும் மாடுபிடி வீரர்கள், காளைகள்! நாளை தொடங்குகிறது முன்பதிவு

/

ஜல்லிக்கட்டுக்கு ரெடியாகும் மாடுபிடி வீரர்கள், காளைகள்! நாளை தொடங்குகிறது முன்பதிவு

ஜல்லிக்கட்டுக்கு ரெடியாகும் மாடுபிடி வீரர்கள், காளைகள்! நாளை தொடங்குகிறது முன்பதிவு

ஜல்லிக்கட்டுக்கு ரெடியாகும் மாடுபிடி வீரர்கள், காளைகள்! நாளை தொடங்குகிறது முன்பதிவு

1


ADDED : ஜன 05, 2025 03:10 PM

Google News

ADDED : ஜன 05, 2025 03:10 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை; மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்கள், காளைகளுக்கு நாளை(ஜன.6) முன்பதிவு தொடங்குகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடக்கிறது.

அவனியாபுரத்தில் வரும்(ஜன) 14ம் தேதியும், பாலமேட்டில் 15ம் தேதியும் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. அலங்காநல்லூரில் வரும் 16ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த 3 போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், காளைகள் ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும். madurai.nic.in என்ற இணையதளம் மூலம் நாளை(ஜன.6) மாலை 5 மணி முதல் ஜனவரி 7ம் தேதி மாலை 5 மணி வரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

3 இடங்களில் ஜல்லிக்கட்டுகள் நடக்கிறது என்ற போதிலும், அதில் ஏதேனும் ஒரு இடத்தில் மட்டுமே காளைகள் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

பதிவு செய்தவர்களின் சான்றுகள் உரிய முறையில் சரி பார்க்கப்பட்ட பின்னர், தகுதியான நபர்கள் மட்டுமே டோக்கன் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.






      Dinamalar
      Follow us