sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி தாக்கியது !

/

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி தாக்கியது !

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி தாக்கியது !

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி தாக்கியது !

17


UPDATED : ஜன 01, 2024 10:01 PM

ADDED : ஜன 01, 2024 01:13 PM

Google News

UPDATED : ஜன 01, 2024 10:01 PM ADDED : ஜன 01, 2024 01:13 PM

17


Google News

முழு விபரம்

Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டோக்கியோ: ஜப்பானின் மேற்கு பகுதியில் இன்று(ஜன.,01) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவானது. மேலும் சுனாமி அலை ஒரு சில பகுதிகளை தாக்கியது. மேலும் பல்வேறு இடங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொருட்சேதம், உயிர்ச்சேதம் அதிகம் இருக்கும் என அஞ்சப்படுகிறது. மேலும் பசிபிக்பெருங்கடல் பகுதி, ரஷ்யா, வட கொரியாவுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ஜப்பானின் மேற்கு பகுதியில் உள்ள ஹோன்சு, டோயாமா, இஷிகவா, நிகாடா, ஹையோகோ உள்ளிட்ட பகுதிகளில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவாகியுள்ளது. மேற்கு ஜப்பானில் உள்ள காஷிவாசாகி-கரிவா அணுமின் நிலையத்திற்கு அருகில் 0.4 மீட்டர் உயர சுனாமி பதிவாகி உள்ளது. வாஜிமோ, நோட்டோ, ஹோ குரிகு பகுதிகளில் கடல் அலைகள் ஊருக்குள் புகுந்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.



பூமிக்கடியில் 10 மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 5 மீட்டர் உயரத்துக்கு சுனாமி தாக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

நிலநடுக்கத்தால் அடுக்குமாடி கட்டடங்கள் தரைமட்டமாகும் வீடியோ காட்சிகளை சமூகவலைதளத்தில் அப்பகுதி மக்கள் பகிர்ந்துள்ளனர். நில நடுக்கம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

மின்சாரம் துண்டிப்பு


நிலநடுக்கத்தால் ஜப்பானில் 36 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பல இடங்களில் சுனாமி அலைகள் 1 முதல் 5 மீட்டர் உயரம் வரை எழும்பியது. சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் சுனாமி தாக்கியது. இதனால் மக்கள் அலறியடித்து பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடினர்.

ஜப்பான் பிரதமர் 'அட்வைஸ்'

இது குறித்து ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுனாமி தாக்கும் பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த வேண்டும். உயிர் சேதங்களைத் தடுக்க முழுமையான நடவடிக்கைகளை எடுக்கவும். எல்லாவற்றிற்கும் மேலாக மனித உயிருக்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கையின் கீழ், உயிர்களைக் காப்பாற்றுதல் மற்றும் பேரிடர் பாதிக்கப்பட்டவர்களை மீட்க இணைந்து செயல்பட வேண்டும். சுனாமி அலைகள் மதிப்பிடப்பட்டதை விட அதிகமாக இருக்கலாம். மீண்டும் மீண்டும் தாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முடிந்தவரை எச்சரிக்கை நீக்கப்படும் வரை மக்கள் பாதுகாப்பான பகுதியை விட்டு வெளியேற வேண்டாம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Image 1214296

அவசர உதவி எண்கள் அறிவிப்பு:

Image 1214299

3 நாட்களுக்கு ஏற்படலாம்


ஜப்பானின் வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது: சுனாமி அலைகள் மீண்டும் மீண்டும் தாக்கும். எனவே, மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும். வலுவான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலச்சரிவு போன்றவற்றால் வீடுகள் இடிந்து விழுவதற்கான அபாயம் இருக்கிறது. அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு நிலநடுக்கங்கள் ஏற்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.

3 மணி நேரத்தில் 30 முறை


ஜப்பானில் 3 மணி நேரத்தில் 30 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அனைத்து நிலநடுக்கங்களும் 4.5 ரிக்டர் அளவுக்கு மேல் பதிவாகியுள்ளது.

ரஷ்யா, தஜிகிஸ்தானிலும் நிலநடுக்கம்

ரஷ்யாவில் 4.8 என்ற ரிக்டர் அளவிலும், தஜிகிஸ்தானிலும் 4.4 என்ற ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us