ADDED : ஆக 05, 2011 06:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : மாநில தலைநகர் சென்னையை பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத மற்றும் தூய்மையான நகரமாக மாற்ற முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இதன் ஒருபகுதியாக, முதல்வர் ஜெயலலிதா, ஹெலிகாப்டர் மூலம் சென்னை நகரை ஆய்வு செய்தார். நகரில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை யாருக்கும் பாதிப்பில்லாமல் எவ்வாறு அகற்றுவது மற்றும் நகரை தூய்மையாக வைத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து பின் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.