sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சென்னையில் பி.எம்.டபிள்யூ., கார் மோதி இளைஞர் பலி; உடல் 100 மீட்டர் தூக்கி வீசப்பட்ட பரிதாபம்!

/

சென்னையில் பி.எம்.டபிள்யூ., கார் மோதி இளைஞர் பலி; உடல் 100 மீட்டர் தூக்கி வீசப்பட்ட பரிதாபம்!

சென்னையில் பி.எம்.டபிள்யூ., கார் மோதி இளைஞர் பலி; உடல் 100 மீட்டர் தூக்கி வீசப்பட்ட பரிதாபம்!

சென்னையில் பி.எம்.டபிள்யூ., கார் மோதி இளைஞர் பலி; உடல் 100 மீட்டர் தூக்கி வீசப்பட்ட பரிதாபம்!

11


ADDED : நவ 20, 2024 02:07 PM

Google News

ADDED : நவ 20, 2024 02:07 PM

11


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னையில் பி.எம்.டபிள்யூ., கார் மோதிய விபத்தில், இளைஞர் ஒருவர் 100 மீட்டர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் மதுரவாயல் தாம்பரம் பைபாஸ் சாலையில், பாண்டி பஜார் பகுதியைச் பிரதீப் குமார் என்பவர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். இவர் பிரபல தெலுங்கு செய்தி சேனலில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்துள்ளார். அது மட்டுமன்றி அவர், பகுதி நேர ரேபிடோ ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று (நவ.,20) தாம்பரம் பைபாஸ் சாலையில், பிரதீப் குமார் பைக்கில் சென்றுள்ளார். அவர் மீது அதிவேகமாக வந்த பி.எம்.டபிள்யூ., கார் மோதியது.

இதனால் 100 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்ட பிரதீப் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கார் ஓட்டுநரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பிரதீப் குமார் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us