sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஓ.பி.எஸ்.,க்கு எதிரான வழக்கில் மார்ச் 18ல் தீர்ப்பு

/

ஓ.பி.எஸ்.,க்கு எதிரான வழக்கில் மார்ச் 18ல் தீர்ப்பு

ஓ.பி.எஸ்.,க்கு எதிரான வழக்கில் மார்ச் 18ல் தீர்ப்பு

ஓ.பி.எஸ்.,க்கு எதிரான வழக்கில் மார்ச் 18ல் தீர்ப்பு


ADDED : மார் 16, 2024 12:35 AM

Google News

ADDED : மார் 16, 2024 12:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:அ.தி.மு.க., கொடி, சின்னம் பயன்படுத்தக்கூடாது என, முன்னாள் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துக்கு உத்தரவிட கோரிய வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் மார்ச் 18ல் தீர்ப்பு அளிக்கிறது.

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தாக்கல் செய்த மனுவில், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்கள், அ.தி.மு.க., கொடி, சின்னம், பெயரை பயன்படுத்தக் கூடாது, விசாரணை முடியும் வரை இடைக்கால தடை விதிக்கவும் கோரியிருந்தார்.

நீதிபதி சதீஷ்குமார், கட்சி பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த முன்னாள் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து, பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபிக் அமர்வு தள்ளுபடி செய்தது.

பிரதான மனு, நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. பன்னீர்செல்வம் தரப்பில், மூத்த வழக்கறிஞர்கள் அரவிந்த்பாண்டியன், அப்துல் சலீம்; பொதுச்செயலர் பழனிசாமி தரப்பில், மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதாடினர். தீர்ப்பை மார்ச் 18ல், நீதிபதி வழங்குகிறார்.






      Dinamalar
      Follow us