sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கச்சத்தீவு தாரை வார்த்தது ராஜதந்திரம் என ஸ்டாலின் ஒப்புக்கொள்வாரா; அண்ணாமலை கேள்வி

/

கச்சத்தீவு தாரை வார்த்தது ராஜதந்திரம் என ஸ்டாலின் ஒப்புக்கொள்வாரா; அண்ணாமலை கேள்வி

கச்சத்தீவு தாரை வார்த்தது ராஜதந்திரம் என ஸ்டாலின் ஒப்புக்கொள்வாரா; அண்ணாமலை கேள்வி

கச்சத்தீவு தாரை வார்த்தது ராஜதந்திரம் என ஸ்டாலின் ஒப்புக்கொள்வாரா; அண்ணாமலை கேள்வி

31


ADDED : ஜன 22, 2025 01:46 PM

Google News

ADDED : ஜன 22, 2025 01:46 PM

31


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை; கச்சத்தீவைத் தாரைவார்த்தது இந்திராவின் ராஜதந்திரம் என்று தமிழக காங்கிரஸ் கூறுவதை முதல்வர் ஸ்டாலின் ஒப்புக்கொள்வாரா என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.



இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை; தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை, கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்தது, மறைந்த இந்திராவின் ராஜதந்திரம் என்று கூறுகிறார்.

எங்களுக்கு சில கேள்விகள்;கடந்த 30 ஆண்டுகளில், இலங்கை அரசால், பல்லாயிரக்கணக்கான இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தான் அந்த ராஜதந்திரமா?

பலநூறு இந்திய மீனவர்கள் நடுக்கடலில் சுட்டுக் கொல்லப்பட்டனரே. அதுவும் உங்கள் ராஜதந்திரம் தானா?

மீன்பிடி படகுகள் கைப்பற்றப்பட்டதால் வாழ்வாதாரத்தை இழந்தார்கள் நம் தமிழக மீனவ சொந்தங்கள். இதுவும் ராஜதந்திரத்தில் தான் அடங்குமா?

கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்தபோது, அன்று தமிழகத்தில் ஆட்சியிலிருந்த தி.மு.க., கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுக்க முழு சம்மதம் தெரிவித்துத் தமிழக மீனவ மக்களுக்குத் துரோகம் செய்ததோடு, கடந்த ஐம்பது ஆண்டுகளாக, ஒவ்வொரு தேர்தலின் போதும், தமிழக மீனவர்கள் பாதுகாப்பு, தமிழர்கள் உரிமை, என்றெல்லாம் நாடகமாடிக் கொண்டிருக்கிறது.

அப்போதெல்லாம் இந்த ராஜதந்திரத்தைப் பற்றித் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி பேசியதில்லையே ஏன்?

தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை சொல்வதுபோலக் கச்சத்தீவைத் தாரை வார்த்தது ராஜதந்திரம் என்று ஒப்புக்கொள்வாரா முதல்வர் ஸ்டாலின்? இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






      Dinamalar
      Follow us