ADDED : நவ 08, 2025 12:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் உள்ள காரைக்கால் மீனவர்கள் 29 பேருக்கு நவ., 10 வரை சிறைக் காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.
செப்., 28, அக்., 9ல் பாக்ஜலசந்தி கடலில் இரு ஆழ்கடல் விசைப்படகில் மீன்பிடித்த காரைக்கால் மீனவர்கள் 29 பேரை இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். கோர்ட் வாய்தா நாளான நேற்று மீனவர்களை ஊர் காவல்துறை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, நவ., 10 வரை சிறைக்காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்களை மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் போலீசார் அடைத்தனர்.

