sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பாடகி பி.சுசீலா, கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைத்துறை வித்தகர் விருது!

/

பாடகி பி.சுசீலா, கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைத்துறை வித்தகர் விருது!

பாடகி பி.சுசீலா, கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைத்துறை வித்தகர் விருது!

பாடகி பி.சுசீலா, கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைத்துறை வித்தகர் விருது!

1


UPDATED : செப் 24, 2024 02:07 PM

ADDED : செப் 24, 2024 01:39 PM

Google News

UPDATED : செப் 24, 2024 02:07 PM ADDED : செப் 24, 2024 01:39 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பாடகி பி.சுசீலா, கவிஞர் மு.மேத்தா ஆகிய இருவருக்கு கருணாநிதி கலைத்துறை வித்தகர் விருதுகள் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிடும் வாழ்நாள் சாதனையாளர்களைப் போற்றிப் பாராட்டும் வகையில் தமிழக அரசின் சார்பில், கருணாநிதி நினைவு கலைத்துறை வித்தகர் விருது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3ம் தேதி வழங்கப்படும்.

கடந்த 2023ம் ஆண்டுக்கான விருது, பின்னணிப் பாடகி பி.சுசீலா மற்றும் கவிஞர் மு.மேத்தாவுக்கு கருணாநிதி கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்படும். பாடகி சுசீலா, 70 ஆண்டுக்கும் மேலான தன் இசைப்பயணத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் பாடி சாதனை படைத்தவர்.

கவிஞர் மு.மேத்தா, மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், சிறு கதைகள், நாவல்கள், கட்டுரைகள் என பல்வேறு படைப்புகளை உருவாக்கியவர். 70க்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல்களை எழுதி, தனி முத்திரை பதித்தவர். மாநிலக்கல்லுாரி பேராசிரியராக பணியாற்றியவர்.

விருதாளர்களுக்கு ரூ.10 லட்சமும், நினைவுப் பரிசும் வழங்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இயக்குனர் முத்துராமன் தலைமையில் நடிகர் சங்க தலைவர் நாசர், இயக்குனர் கரு.பழனியப்பன் ஆகியோர் கொண்ட குழு, விருதாளர்களை தேர்வு செய்துள்ளனர்.இந்த விருது, வரும் 30ம் தேதி தலைமை செயலகத்தில் நடக்கும் விழாவில் வழங்கப்பட உள்ளது.






      Dinamalar
      Follow us