sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஜெர்மனியில் 4 நாள் ஜவுளி கண்காட்சி ரூ.3,000 கோடி ஆர்டர் எதிர்பார்க்கும் கரூர்

/

ஜெர்மனியில் 4 நாள் ஜவுளி கண்காட்சி ரூ.3,000 கோடி ஆர்டர் எதிர்பார்க்கும் கரூர்

ஜெர்மனியில் 4 நாள் ஜவுளி கண்காட்சி ரூ.3,000 கோடி ஆர்டர் எதிர்பார்க்கும் கரூர்

ஜெர்மனியில் 4 நாள் ஜவுளி கண்காட்சி ரூ.3,000 கோடி ஆர்டர் எதிர்பார்க்கும் கரூர்


ADDED : ஜன 11, 2025 12:28 AM

Google News

ADDED : ஜன 11, 2025 12:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:ஜெர்மனில் நடைபெறும், வீட்டு உபயோக ஜவுளி கண்காட்சியில், கரூருக்கு, 3,000 கோடி ரூபாய்க்கு ஆர்டர் கிடைக்கும் என, ஜவுளி உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

கரூர் மாவட்டத்தில், 600க்கும் மேற்பட்ட ஜவுளி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் உள்ளன. ஸ்கிரீன், தலையணை உறைகள், மேஜை விரிப்பு, கர்சிப், சோபா விரிப்பு, துண்டு ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டு பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி மற்றும் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்தாண்டு ஜனவரியில், ஜெர்மனி நாட்டின் பிராங்பர்ட் நகரில், உலகளாவிய வீட்டு உபயோக ஜவுளி கண்காட்சி நடக்கிறது. இதில், கரூரை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் பலர் பங்கேற்கின்றனர்.

இது குறித்து, இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு தெற்கு மண்டல தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:

ஜெர்மனியில் உள்ள பிராங்க்பர்ட் நகரில் வரும், 14 முதல், 17 வரை ஜவுளி கண்காட்சி நடக்கிறது. 60 நாடுகளில் இருந்து, 3,000க்கும் மேற்பட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள், மொத்த விற்பனையாளர்கள் பொருட்களை காட்சிப்படுத்த உள்ளனர். 330 நிறுவனங்கள் இந்தியாவை சேர்ந்தவை. கரூரில் இருந்து, 67 ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் பானிபட்டை சேர்ந்த, 158 நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.

கண்காட்சி மூலம் உலகளவில் இருந்து வருகை தரக்கூடிய வாடிக்கையாளர்களை சந்தித்து, அதிக அளவு ஒப்பந்தங்கள் பெற்று ஜவுளி ஏற்றுமதியை அதிகரிக்க முடியும். கரூர் ஜவுளி நிறுவனங்கள் இந்த கண்காட்சியின் மூலம், 3,000 கோடி ரூபாய் அளவிற்கு ஏற்றுமதி ஆர்டர்களை பெறுவர் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us