sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: தாசில்தார் அதிரடி கைது

/

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: தாசில்தார் அதிரடி கைது

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: தாசில்தார் அதிரடி கைது

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: தாசில்தார் அதிரடி கைது

7


ADDED : மார் 30, 2025 09:59 PM

Google News

ADDED : மார் 30, 2025 09:59 PM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலூர்: நீலகிரி மாவட்டத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த தாசில்தார் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுபற்றிய விவரம் வருமாறு;

கூடலூர் கலால் மதுவிலக்கு பிரிவு தாசில்தாராக இருப்பவர் சித்தராஜ்(54). இவர், கூடலூர் மண்வயல் கோழிகண்டி பகுதியில் நாட்டுக்கோழி மற்றும் அதன் முட்டைகள் வாங்க அடிக்கடி சென்று வருவது வழக்கம்.

சம்பவத்தன்று அங்கு நாட்டுக்கோழி முட்டை வாங்குவதற்காக அவர் சென்றுள்ளார். அங்கிருந்த 42 வயது பெண், தற்போது முட்டை இல்லை என, தெரிவித்துள்ளார். அப்போது சித்தராஜ், திடீரென அந்த பெண்ணின் கையைப் பிடித்து இழுத்து பாலியல் தொல்லை செய்துள்ளார்.

பெண்ணின், சத்தம் கேட்டு உறவினர்கள் வருவதை பார்த்த சித்தராஜ், அங்கிருந்து தப்பியுள்ளார். இது தொடர்பாக, கூடலூர் போலீசில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு சித்தராஜை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us