sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கிருஷ்ணகிரி சம்பவம்: தமிழக அரசு சாட்டை

/

கிருஷ்ணகிரி சம்பவம்: தமிழக அரசு சாட்டை

கிருஷ்ணகிரி சம்பவம்: தமிழக அரசு சாட்டை

கிருஷ்ணகிரி சம்பவம்: தமிழக அரசு சாட்டை

9


ADDED : ஆக 21, 2024 06:00 AM

Google News

ADDED : ஆக 21, 2024 06:00 AM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அடுத்த கந்திகுப்பத்தில், பள்ளி மாணவி பலாத்கார சம்பவம் எதிரொலியாக, பயிற்சி முகாம்கள் நடத்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குனர் பழனிசாமி, அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் (தனியார் பள்ளிகள்), மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: மெட்ரிக், சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட தனியார் சுயநிதி பள்ளிகளில், என்.எஸ்.எஸ்., -- என்.சி.சி., ஸ்கவுட் போன்ற அமைப்புகளை நடத்துகின்றன. அதன் செயல்பாடுகளை பள்ளிகளில் செயல்படுத்த, மாநில அமைப்பிடம் முறையாக பதிவு செய்து, அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், பள்ளியில் இருத்தல் வேண்டும். மாநில அமைப்பு மூலம், முறையாக பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாமல், எந்தவொரு அமைப்பும் பள்ளியில் செயல்படக்கூடாது. மாணவர்களுக்கு ஆண் ஆசிரியர்கள், மாணவியருக்கு பெண் ஆசிரியைகள் மூலமாக பயிற்சி வழங்க வேண்டும்.

முகாம்கள் நடத்தும்போது, மாவட்ட கல்வி அலுவலருக்கு (தனியார் பள்ளிகள்) அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும். மாவட்ட, மாநில பொறுப்பாளர்கள், மாவட்ட கல்வி அலுவலரின் அனுமதி இல்லாமல் எந்த முகாமும், பயிற்சியும் நடத்த ஏற்பாடு செய்யக்கூடாது.

அதே போல, மாணவ, மாணவியர், பெற்றோர் அனுமதியும் எழுத்து பூர்வமாக பெறவேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us