sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கல்லறை தோட்டம், 'கபர்ஸ்தான்' அமைப்பதற்கான நிலங்கள் உள்ளாட்சிகளிடம் ஒப்படைப்பு

/

கல்லறை தோட்டம், 'கபர்ஸ்தான்' அமைப்பதற்கான நிலங்கள் உள்ளாட்சிகளிடம் ஒப்படைப்பு

கல்லறை தோட்டம், 'கபர்ஸ்தான்' அமைப்பதற்கான நிலங்கள் உள்ளாட்சிகளிடம் ஒப்படைப்பு

கல்லறை தோட்டம், 'கபர்ஸ்தான்' அமைப்பதற்கான நிலங்கள் உள்ளாட்சிகளிடம் ஒப்படைப்பு


ADDED : நவ 02, 2025 12:50 AM

Google News

ADDED : நவ 02, 2025 12:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கல்லறை தோட்டங்கள், கபர்ஸ்தான்கள் அமைப்பதற்கான நிலங்களை, உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைப்பதற்கான ஆணையை, முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

கிறிஸ்துவர்களுக்கான கல்லறைத் தோட்டங்கள், முஸ்லிம்களுக்கான கபர்ஸ்தான் இல்லாத மாவட்ட தலைநகரங்களில், உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில், அவற்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, கடந்த 2024 ஜனவரி 9ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் விருதுநகர், தேனி, ராமநாதபுரம், திருவள்ளூர், பெரம்பலுார், சிவகங்கை மாவட்டங்களில், கிறிஸ்துவர்களுக்கான பொது கல்லறைத் தோட்டங்கள்; விருதுநகர், தேனி, திருவள்ளூர், பெரம்பலுார், சிவகங்கை மாவட்டங்களில், முஸ்லிம்களுக்கான பொது கபர்ஸ்தான்கள் அமைக்க, அரசால் நிலம் ஒதுக்கப்பட்டது.

அவ்விடங்களில் சுற்றுச்சுவர், பெயர் பலகை, தேவையான அடிப்படை வசதிகளை அமைத்து, முறையாக பராமரிக்க, உள்ளாட்சி அமைப்புகளிடம் வழங்குவதற்கான ஆணையை, நகராட்சி கமிஷனர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம், முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார்.






      Dinamalar
      Follow us