sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நில மோசடி வழக்கு: தலைமறைவான அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கைது

/

நில மோசடி வழக்கு: தலைமறைவான அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கைது

நில மோசடி வழக்கு: தலைமறைவான அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கைது

நில மோசடி வழக்கு: தலைமறைவான அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கைது

12


UPDATED : ஜூலை 16, 2024 03:44 PM

ADDED : ஜூலை 16, 2024 12:46 PM

Google News

UPDATED : ஜூலை 16, 2024 03:44 PM ADDED : ஜூலை 16, 2024 12:46 PM

12


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: ரூ.100 கோடி நில மோசடி புகாரில், தலைமறைவாக இருந்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கேரளாவில் கைது செய்தனர். தற்போது அவரை கரூர் சி.பி.சி.டி., அலுவலகத்திற்கு அழைத்து வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ், கரூர் எஸ்.பி., அலுவலகம் மற்றும் போலீஸ் ஸ்டேசனில் அளித்த புகாரில், ‛ தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பு நிலத்தை எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்தார்' என தெரிவித்து இருந்தார்.

இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பிறகு வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் விஜயபாஸ்கர் மனு செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால், அவர் தலைமறைவானார். அவரை பிடிக்க 5 தனிப்படைகளை போலீசார் அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில்,நில மோசடி வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கேரளாவில் வைத்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர். அவரை கரூர் சி.பி.சி.டி., அலுவலகத்திற்கு அழைத்து வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இ.பி.எஸ்., கண்டனம்


இது தொடர்பாக அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. இந்த கைதிற்கு விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். முன்னாள் விடியா திமுக அமைச்சர், இந்நாள் புழல் சிறைவாசி செந்தில் பாலாஜிக்காக பழிவாங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், சிவில் வழக்கு ஒன்றை கையில் வைத்துக்கொண்டு அதீத முறையில் சோதனைகளையும் கைது நடவடிக்கையும் மேற்கொள்வது கடும் கண்டனத்திற்குரியது. அரசியல் காழ்ப்புணர்வோடு விடியா திமுக அரசு ஏவும் பொய் வழக்குகள் யாவையும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சட்டப்பூர்வமாக சந்தித்து வெல்வார்! இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us