ADDED : செப் 22, 2024 01:15 AM
15.09.2024 - 21.09.2024 வரை
சென்னை துரைப்பாக்கத்தில், மாதவரத்தைச் சேர்ந்த பாலியல் தொழிலாளி தீபா, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற பொறியாளரால் துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டார்
சென்னை பெரும்பாக்கம் எழில் நகரில், கஞ்சா விற்பனை குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்த கலைவாணன் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த வசந்த் உள்ளிட்ட ஐந்து பேரால் அம்மிக்கல்லை தலையில் போட்டுக் கொல்லப்பட்டார்
காஞ்சிபுரம் கம்பர் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணி மனைவி அலமேலு, திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே கொளத்துார் ஏரி பகுதியில், போலி சாமியாரால் கழுத்து அறுத்து கொல்லப்பட்டார்
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மவுனிகா, வாலிபர் ஒருவருடன் திருவண்ணாமலை மாவட்டம் அருணாசலேஸ்வரர் கோவில் அருகே மடத்தில் தங்கி இருந்த போது, துாக்கில் தொங்கினார். கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியைச் சேர்ந்த பசுபதி, குடும்ப பிரச்னை காரணமாக, மாமியார் பாண்டியலட்சுமி, மூதாட்டி சொர்ணமுத்து ஆகியோரை வெட்டிக் கொன்றார்
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரைச் சேர்ந்த டாக்டர் குமரகுருபரன், மேல்மருவத்துாரில் உள்ள வீட்டில் எரிந்த நிலையில் கிடந்தார். கொலையா என விசாரணை நடக்கிறது
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மாகரல் பகுதியைச் சேர்ந்த வேலு, மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், அவரது மனைவி சுமதியை வெட்டிக் கொன்றார்
மணலி ஹரிகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன், குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வெட்டிக் கொல்லப்பட்டார்
சென்னை அருகே பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த ஜோசப் அஜித்குமார் என்பவர், இரவல் கொடுத்த இருசக்கர வாகனத்தை கேட்டதற்காக, நண்பர் ஜெயம் என்பவரால் குத்திக் கொல்லப்பட்டார்
தேனி அருகே பின்னத்தேவன்பட்டியைச் சேர்ந்த ஜோதியம்மாள், கணவரை பிரிந்து 15 வயது மகளுடன் வசித்து வந்தார். கூலி வேலைக்கு சென்றபோது, தன்னை கேலி செய்ததாக முருகேஸ்வரி என்பவரை அரிவாளால் வெட்டினார். இதனால், ஆத்திரமடைந்த முருகேஸ்வரியின் உறவினர்கள், ஜோதியம்மாளை உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்றனர்
காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் பகுதியில் டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறில், செம்பாக்கத்தைச் சேர்ந்த காணிக்கைராஜ், வினோத் என்பவரால் அடித்துக் கொல்லப்பட்டார்
கோவை அருகே சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில், காதலனுடன் தங்கிய கோவை கள்ளப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கீதா அடித்துக் கொல்லப்பட்டார்
தேனி மாவட்டம் போடி அருகே ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணி, சொத்தில் பங்கு கேட்டு குடிபோதையில் தகராறு செய்த மகன் சுகுமாரை, கத்தியால் குத்திக் கொன்றார்
துாத்துக்குடி மாவட்டம், மறவன்மடத்தைச் சேர்ந்த முருகன், முன்விரோதம் காரணமாக வெட்டிக் கொல்லப்பட்டார்
சேலம் மாவட்டம் ஆலச்சம்பாளையம் பகுதியில், மகள்வழி பேரனால் 80 வயது மூதாட்டி வள்ளியம்மாள் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார்
வேலுார் மாவட்டம் குடியாத்தம் அருகே ஏரிப்பட்டியைச் சேர்ந்த வசந்தகுமார், திருப்பத்துார் மாவட்டம் மாதவனுாரைச் சேர்ந்த நண்பர் யோகராஜிடம் வாங்கிய 14,000 ரூபாய் கடன் பிரச்னையில், அவரின் 6 மற்றும் 4 வயது மகன்களை கடத்திச் சென்று கழுத்தை நெரித்துக் கொன்றார்.