தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது: மத்திய அமைச்சர் எல்.முருகன்
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது: மத்திய அமைச்சர் எல்.முருகன்
ADDED : ஜன 25, 2024 05:05 PM

மேட்டுப்பாளையம்: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் நடைபெற்ற 'நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்' நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார்.
80 லட்சம் ரூபாய் மதிப்பிலான கல்வி மற்றும் சுயதொழில்களுக்கான பல்வேறு கடனுதவிகளை பயனாளிகளுக்கு எல்.முருகன் வழங்கினார்.
பின்னர் நிருபரகள் சந்திப்பில் எல்.முருகன் கூறியதாவது: 2047ம் ஆண்டில் முன்னேறிய நாடாக இந்தியாவை உருவாக்க பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தனியார் தொலைக்காட்சியைச் சேர்ந்த பத்திரிகையாளர் மர்ம நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதை காட்டுகிறது. இண்டியா கூட்டணி தேர்தல் வரை கூட நீடிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.