ADDED : பிப் 14, 2026 07:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழ்நாடு அரசு கல்லுாரி, கவுரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு சார்பில், மாநிலம் முழுதும் கவுரவ விரிவுரையாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
யு.ஜி.சி., உத்தரவின்படி, 57,000 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று ஐந்தாம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பெரும்பாலான, அரசு கல்லுாரிகளில், இரண்டாம் சுழற்சி வகுப்புகள், கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன.
மதியம் 1:30 மணி முதல் 5:40 மணி வரையிலான வகுப்புகள், பாடம் நடத்த போதிய பேராசிரியர்கள் இல்லாததால், மதியம் 2:30 மணி வரை மட்டுமே நடத்தப்படுகின்றன. இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநிலக் கல்லுாரியில், கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஆதரவாக, மாணவ, மாணவியர் நேற்று போராட்டம் நடத்தினர்.

