sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'வாழும் கைவினை பொக்கிஷம்' விருது ஏழு பேருக்கு வழங்கி கவுரவிப்பு

/

'வாழும் கைவினை பொக்கிஷம்' விருது ஏழு பேருக்கு வழங்கி கவுரவிப்பு

'வாழும் கைவினை பொக்கிஷம்' விருது ஏழு பேருக்கு வழங்கி கவுரவிப்பு

'வாழும் கைவினை பொக்கிஷம்' விருது ஏழு பேருக்கு வழங்கி கவுரவிப்பு


ADDED : செப் 17, 2025 02:02 AM

Google News

ADDED : செப் 17, 2025 02:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:கைவினை கலைஞர்கள் ஏழு பேருக்கு, 'வாழும் கைவினை பொக்கிஷம்' விருதுகளை, முதல்வர் ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.

கைவினை தொழிலுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த, 65 வயதுக்கு மேற்பட்ட சிறந்த கைவினை கலைஞர்களுக்கு, தமிழக அரசு சார்பில், 'வாழும் கைவினை பொக்கிஷம்' என்ற விருது வழங்கப்படுகிறது.

அதன்படி, 2024 - 25ம் ஆண்டிற்கான விருதுக்கு, கன்னியாகுமரியைச் சேர்ந்த, இயற்கை நார் பொருட்கள் தயாரிப்பாளர் ராணி வின்சென்ட்; தஞ்சாவூரைச் சேர்ந்த உலோக தகட்டு வேலை கலைஞர் வீழிநாதன்; விருதுநகரைச் சேர்ந்த மியூரல் ஓவிய கலைஞர் இளவரசி சொக்கர்; திருவண்ணாமலையைச் சேர்ந்த கற்சிற்ப கலைஞர் குப்பு சுப்பிரமணி; கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சித்திர தையல் கலைஞர் பூவம்மாள்; சேலத்தைச் சேர்ந்த மர சிற்ப கலைஞர் துரைராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு, நேற்று தலைமைச் செயலகத்தில், விருதுக்கான 1 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை, 8 கிராம் தங்கப் பதக்கம், தாமிர பதக்கம், சான்றிதழ் ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

அதேபோல், 2024 - 25ம் ஆண்டிற்கான, பூம்புகார் மாநில விருது, 10 கைவினை கலைஞர்களுக்கு வழங்கப்பட்டது.

அவர்களுக்கு விருதுடன், 4 கிராம் தங்கப் பதக்கம், 50,000 ரூபாய் பரிசுத் தொகை, தாமிர பத்திரம், சான்றிதழ் ஆகியவற்றை முதல்வர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், குறு, சிறு தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசன், தலைமைச் செயலர் முருகானந்தம், கைத்தறி துறை செயலர் அமுதவல்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us