sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

லாக்கப் மரண வழக்கு; போலீசார் 9 பேருக்கு ஆயுள்!

/

லாக்கப் மரண வழக்கு; போலீசார் 9 பேருக்கு ஆயுள்!

லாக்கப் மரண வழக்கு; போலீசார் 9 பேருக்கு ஆயுள்!

லாக்கப் மரண வழக்கு; போலீசார் 9 பேருக்கு ஆயுள்!

7


ADDED : ஏப் 05, 2025 06:46 PM

Google News

ADDED : ஏப் 05, 2025 06:46 PM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி: தூத்துக்குடியில் போலீஸ் ஸ்டேசனில் விசாரணை கைதி மரணமடைந்த வழக்கில், டி.எஸ்.பி., உள்ளிட்ட 9 போலீசாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

தூத்துக்குடியில் கடந்த 1999ம் ஆண்டு வெடிகுண்டு வழக்கு தொடர்பாக, வின்சென்ட் என்பவரை தாளமுத்து நகர் போலீசார் கைது செய்தனர். விசாரணை கைதியாக போலீஸ் ஸ்டேசனில் இருந்த நிலையில் அதே ஆண்டு செப்., 18 ல் மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

25 ஆண்டுகளுக்கு பிறகு 2024 ஜூன் மாதம் தூத்துக்குடி மாவட்ட அமர்வு நீதிமன்றம் எண் 1ல் இந்த வழக்கு விசாரணைக்குஎடுத்துக் கொள்ளப்பட்டது. 13 சாட்சிகளிடம் விசாரணை நடந்தது, 38 ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இன்று தீர்ப்பு வழங்கிய தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் எண் 1 நீதிபதி தாண்டவன், குற்றம்சாட்டப்பட்ட 11 போலீசாரில் பேரில் இரண்டு பேரை விடுவித்தார். மற்ற 9 போலீசாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். தண்டனை பெற்ற ராமகிருஷ்ணன் என்பவர் தற்போது ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி., ஆக உள்ளார். மற்றொருவர் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். மற்றவர்கள் ஓய்வு பெற்று விட்டனர்.






      Dinamalar
      Follow us