தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ லோக் பவன் முற்றுகை: வைகோ கைது

 லோக் பவன் முற்றுகை: வைகோ கைது

 லோக் பவன் முற்றுகை: வைகோ கைது

7


ADDED : ஜூன் 08, 2026 09:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 08, 2026 09:12 AM

7


7
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சென்னையில் லோக் பவனை முற்றுகையிட முயன்ற ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ கைது செய்யப்பட்டார்.

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையான லோக் பவனில், கடந்த மே 30ம் தேதி, திருவள்ளுவர் திருநாள் கழகம் சார்பில், திருவள்ளுவர் திருநாள் விழா கொண்டாடப்பட்டது.

அப்போது, திருவள்ளுவர் காவி உடை அணிந்திருப்பது போல சித்தரிக்கப்பட்ட படத்திற்கு, கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் மலர் துாவி மரியாதை செய்தார்.

இதையடுத்து, திருவள்ளுவருக்கு மத சாயம் பூச கவர்னர் முயல்கிறார் என, தி.மு.க., உள்ளிட்ட அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில், கவர்னரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ம.தி.மு.க., சார்பில் நேற்று லோக் பவன் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.

அதில், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ தலைமையில், ௧௦௦க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us