sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இங்கு இருப்பாரோ; அங்கு இருப்பாரோ: நீலகிரியில் ராஜாவை கிண்டல் செய்த இ.பி.எஸ்.

/

இங்கு இருப்பாரோ; அங்கு இருப்பாரோ: நீலகிரியில் ராஜாவை கிண்டல் செய்த இ.பி.எஸ்.

இங்கு இருப்பாரோ; அங்கு இருப்பாரோ: நீலகிரியில் ராஜாவை கிண்டல் செய்த இ.பி.எஸ்.

இங்கு இருப்பாரோ; அங்கு இருப்பாரோ: நீலகிரியில் ராஜாவை கிண்டல் செய்த இ.பி.எஸ்.

3


ADDED : ஏப் 04, 2024 12:58 PM

Google News

ADDED : ஏப் 04, 2024 12:58 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி: ‛‛2ஜி முறைகேடு ஊழல் வழக்கில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இது முடிந்த பிறகு ஆ.ராஜா இங்கு இருப்பாரா; அங்கு இருப்பாரா என தெரியாது'' என, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.

நீலகிரி தொகுதி வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வனை ஆதரித்து, அ.தி.மு.க., பொது செயலாளர் இ.பி.எஸ்., ஊட்டியில் பேசியதாவது: நீலகிரி மாவட்டம், முன்னாள் முதல்வர் ஜெ., பிடித்த மாவட்டம். அ.தி.மு.க.,வின் கோட்டை. இங்குள்ள அ.தி.மு.க., ஆட்சியின் போது பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

அதில், கடந்த, 50 ஆண்டு பிரச்னையான, மருத்துவ கல்லுாரி திட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கு அப்போலோ மருத்துவனையை போல, அதிநவீன சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த கல்லுாரியை நாங்கள் கொண்டு வந்தால், அதனை தி.மு.க., கொண்டு வந்ததை போல முதல்வர் திறந்து வைத்ததாக பிரசாரம் செய்கின்றனர். இது, நான் பெற்ற பிள்ளைக்கு, அவர்கள் பெயர் வைத்தது போன்றதாகும். நாங்கள் கொண்டு வரும் திட்டங்களுக்கு அவர்கள் 'லேபிள்' ஒட்டுகின்றனர்.

ஆ.ராஜாவுக்கு ஓட்டுப் போட்டு எந்த பயனும் இல்லை. ராஜா அமைச்சராக இருந்தபோது கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்தார். ரூ.1.75 லட்சம் கோடி முறைகேடு செய்ததற்காக ராஜாவை காங்கிரஸ் ஆட்சி சிறையில் அடைத்தது. அவர் மீதான முறைகேடு வழக்கில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. அவர் இங்கே இருப்பாரா அங்கே இருப்பாரா என தெரியாது.

திமுக.,வில் ஒவ்வொருவரும் ஊழல் செய்ததற்காக சிறை செல்கின்றனர். ஆ.ராஜாவும் சிறை செல்வார்.திமுக., ஊழல் கட்சி. ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக அரசு. ஊர் ஊராக சென்று என்னையையும், அதிமுக.,வையும் குறை சொல்லிக் கொண்டு இருக்கும் ஒருவர் விரைவில் சிறை செல்வார் என தகவல்.

3 ஆண்டு ஆட்சியில் சாதனை திட்டங்கள் இல்லாததால், கடந்த 10 நாட்களாக அ.தி.மு.க.,வை ஸ்டாலின் விமர்சித்து வருகிறார். அ.தி.மு.க., ஆட்சியை இருண்ட ஆட்சி என்கிறார் ஸ்டாலின். அவர் கண்ணை மூடிக் கொண்டால் நாங்கள் என்ன செய்வது. இவ்வாறு இ.பி.எஸ்., பேசினார்.






      Dinamalar
      Follow us