/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கட்டுமான பணியில் தவறி விழுந்தவர் பலி
/
கட்டுமான பணியில் தவறி விழுந்தவர் பலி
ADDED : பிப் 03, 2026 04:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: உளுந்துார்பேட்டை அடுத்த புல்லுார் அருகே, காலணி தொழிற்சாலை கட்டுமான பணி நடந்து வருகிறது.
இங்கு ஜார்க்கண்ட் மாநிலம், கர்வா மாவட்டம், பஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த புதின்நாராயணசிங் மகன் அரவிந்த்குமார், 29; கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று மாலை 6.௦௦ மணியளவில், கட்டுமான பணியில் ஈடுபட்ட போது தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அரவிந்த்குமாரை மீட்டு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து எடைக்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின் றனர்.

