ADDED : ஆக 27, 2026 07:23 AM

தமிழகத்தை பொருத்தவரை, இயற்கை நலனையும், இயற்கை வளங்களையும் பேணி பாதுகாக்க வேண்டும் என்பதில் முதல்வர் விஜய் தீவிரமாக இருக்கிறார். இதற்காக, கட்டுமானப் பொருட்களை அண்டை மாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்யலாமா என அரசு ஆலோசித்து வருகிறது. ஜல்லி, மணல் உள்ளிட்ட மூலப்பொருட்கள், கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுவதை அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. தமிழகத்தில் மலைகளை பாதுகாக்க தனிச்சட்டம் இயற்றப்படும்.
சட்டசபையில் நடக்கும் நிகழ்வுகள், அவை குறிப்பிலிருந்து நீக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுவதால், பதிவுக்கு பின் நீக்கப்படுகிறது.
'ரீல்ஸ்' போடுவதை கட்டுப்படுத்த செய்தித்துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். 'யூடியூப், பேஸ்புக்' போன்ற சமூக ஊடகங்கள் அனைத்தும் பலருடைய கைகளில் இருக்கிறது. அவற்றைக் கட்டுப்படுத்த, செய்தி துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
- செங்கோட்டையன்
தமிழக அமைச்சர், த.வெ.க.,
