ADDED : ஆக 21, 2025 10:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில் ஆறு அரசு கல்வியியல் கல்லுாரிகளில், 300 எம்.எட்., படிப்புக்கான இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு, கடந்த 11ம் தேதி துவங்கி, நேற்று முன்தினத்துடன் முடிந்தது.
வரும் 26ம் தேதி முதல், கவுன்சிலிங் துவங்கும் நிலையில், எம்.எட்., படிப்புக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவ - மாணவியர், செப்டம்பர் 15ம் தேதிக்குள், www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

