ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த மருத்துவ மாணவர் தற்கொலை
ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த மருத்துவ மாணவர் தற்கொலை
ADDED : மே 16, 2024 04:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: வட சென்னை கொருக்குப்பேட்டை கேகே நகரை சேர்ந்தவர் தனுஷ்(23).
தனியார் மருத்துவ கல்லூரியில்3ம் ஆண்டு படித்து வந்தார். ஆன்லைன் ரம்மியில் ஆர்வம் கொண்ட இவர், இந்த விளையாட்டில் பணத்தை இழந்துள்ளார். இந்நிலையில் தந்தையிடம் தனுஷ் 24 ஆயிரம் ரூபாய் கேட்டு உள்ளார். ஆனால், அவர் ரூ.4 ஆயிரம் மட்டுமே கொடுத்துள்ளார். இதனை வாங்கிக்கொண்டு அவரது அறைக்கு சென்ற இவர், நீண்ட நேரம் கதவை திறக்கவில்லை. இது குறித்து போலீசுக்கு பெற்றோர் தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து கதவை உடைத்து பார்த்த போது, தனுஷ் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் மொபைல் போனை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.