sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நெல்லையில் மருத்துவக் கழிவுகளை கொட்டிய விவகாரம்: 2 பேர் சிக்கினர்

/

நெல்லையில் மருத்துவக் கழிவுகளை கொட்டிய விவகாரம்: 2 பேர் சிக்கினர்

நெல்லையில் மருத்துவக் கழிவுகளை கொட்டிய விவகாரம்: 2 பேர் சிக்கினர்

நெல்லையில் மருத்துவக் கழிவுகளை கொட்டிய விவகாரம்: 2 பேர் சிக்கினர்

23


UPDATED : டிச 19, 2024 04:51 PM

ADDED : டிச 19, 2024 04:49 PM

Google News

UPDATED : டிச 19, 2024 04:51 PM ADDED : டிச 19, 2024 04:49 PM

23


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: நெல்லையில், கேரள மருத்துவக் கழிவுகளை கொட்டிய விவகாரத்தில் தலைமை ஏஜென்ட் ஆக செயல்பட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி அருகே நடுக்கல்லுார், கோடகநல்லுார் பகுதிகளில் கேரள மாநிலம், திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையத்திலிருந்து கொண்டு வரப்பட்ட அபாயகரமான மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டன. இதையடுத்து, சுத்தமல்லி போலீசார் புதிய குற்றவியல் சட்டம் 271, 272 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில், தலைமை ஏஜென்ட் ஆக செயல்பட்ட சுத்தமல்லியைச் சேர்ந்த மனோகர்(51), மாயாண்டி(42) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் விசாரணை நடந்து வருவதாக மாவட்ட எஸ்.பி., சிலம்பரசன் கூறியுள்ளார்.

லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு கழிவுகளை கொட்டியதும், இதற்கான இடங்களை இவர்கள் அடையாளம் காட்டியதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us