sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சென்னையில் ட்ரோன் மூலம் மருந்து, உணவு விநியோகம்; தண்ணீரில் தவிப்பவருக்கு உதவ திட்டம்

/

சென்னையில் ட்ரோன் மூலம் மருந்து, உணவு விநியோகம்; தண்ணீரில் தவிப்பவருக்கு உதவ திட்டம்

சென்னையில் ட்ரோன் மூலம் மருந்து, உணவு விநியோகம்; தண்ணீரில் தவிப்பவருக்கு உதவ திட்டம்

சென்னையில் ட்ரோன் மூலம் மருந்து, உணவு விநியோகம்; தண்ணீரில் தவிப்பவருக்கு உதவ திட்டம்

5


ADDED : அக் 16, 2024 01:12 PM

Google News

ADDED : அக் 16, 2024 01:12 PM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை மாநகராட்சியில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ட்ரோன்கள் மூலம் உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஒத்திகை இன்று(அக்.,16) ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் துவக்கமே, அமர் களமாக உள்ளது. இரண்டு தினங்களாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது. தலைநகர் சென்னையில் இடைவிடாது மழை பெய்து வருகின்றது. நகரின் பல பகுதிகளில் மழைநீர் தேங்காத வண்ணம் சென்னை மாநகராட்சி அதிகாரிகள், மண்டலம் வாரியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் படகுகள் செல்ல முடியாத சூழ்நிலையில் மழைநீர் தேங்கியுள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை ட்ரோன் மூலம் உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஒத்திகை இன்று(அக்.,16) ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.

இதனை அமைச்சர் கே.என்.நேரு ரிப்பன் கட்டட வளாகத்தில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, துணை மேயர் மகேஷ்குமார், ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) டாக்டர் வி. ஜெயசந்திர பானு ரெட்டி, துணை ஆணையாளர்கள் வி.சிவகிருஷ்ணமூர்த்தி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us