உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஜன 02, 2025 11:09 PM
அ நிறம் | அளவு
ராஜராஜ சோழனின் தந்தையான சுந்தரசோழன், தன் அமைச்சர் அனிருத்த பிரம்மராயரின் திறமையை பாராட்டி, 'பிரமாதிராசன்' என்ற பட்டத்தையும், மயிலாடுதுறை அருகே, கருணாகரமங்கலம் என்ற கிராமத்தில், 10 வேலி நிலத்தையும் வழங்கினார்.
இத்தகவல்கள் அடங்கிய வரலாற்று பொக்கிஷமான, 'அன்பில் செப்பேடு' மாயமானது. இதுகுறித்து, போலீஸ் எஸ்.ஐ.,க்கள் ராஜேஷ், பாண்டியராஜன் ஆகியோர் இடம் பெற்ற தனிப்படை போலீசார், கும்பகோணம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, லால்குடி மற்றும் திருச்சியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
