மதுரையில் எம்ஜிஆர் சிலை சேதம்; கோழைகள் செய்த இழிசெயல் என இபிஎஸ் கண்டனம்
மதுரையில் எம்ஜிஆர் சிலை சேதம்; கோழைகள் செய்த இழிசெயல் என இபிஎஸ் கண்டனம்
ADDED : அக் 06, 2025 10:14 AM

சென்னை: மதுரையில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை; மதுரை , திருப்பரங்குன்றம், அவனியாபுரம் பகுதி வாடிவாசல் அருகே அமைந்துள்ள எம்ஜிஆரின் திருவுருவச் சிலையை சேதப்படுத்திய சம்பவம் பெரும் கண்டத்துக்குரியது.
எம்ஜிஆரின் புகழையும், அவரது கொள்கைகளையும் நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாத கோழைகள் செய்த இழிசெயலாகவே இதை கருதுகிறேன்.
சிலையை சேதப்படுத்துவதன் மூலம் எம்ஜிஆர் செய்த சாதனைகளையும், அவரது புகழையும், அவர் தனது திட்டங்கள் மூலமாக மக்களிடையே ஏற்படுத்திய புரட்சியையும் சிறிதளவு கூட மக்கள் மனதில் இருந்து குறைக்கவோ, மாற்றவோ முடியாது.
இச்செயலை செய்து, பொது அமைதியை சீர்குலைக்க நினைக்கும் சமூகவிரோதிகளை உடனடியாக கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசை வலியுறுத்துகிறேன், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.