sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

குறு, சிறு நிறுவனங்கள் 'டிக்' நிறுவனத்தில் கடன் வாங்கலாம்

/

குறு, சிறு நிறுவனங்கள் 'டிக்' நிறுவனத்தில் கடன் வாங்கலாம்

குறு, சிறு நிறுவனங்கள் 'டிக்' நிறுவனத்தில் கடன் வாங்கலாம்

குறு, சிறு நிறுவனங்கள் 'டிக்' நிறுவனத்தில் கடன் வாங்கலாம்


ADDED : பிப் 25, 2024 02:12 AM

Google News

ADDED : பிப் 25, 2024 02:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, துாத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள், 2023 டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டன. இதில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு, 'டிக்' எனப்படும் தமிழக தொழில் முதலீட்டு கழகம் சிறப்பு கடன் வழங்குகிறது.

அதன்படி, ஒரு நிறுவனத்திற்கு, 6 சதவீத வட்டியில் அதிகபட்சம், 3 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. இதை திரும்ப செலுத்தவும் கூடுதல் அவகாசம் அளிக்கப்படுகிறது.

ஜனவரி துவக்கத்தில் கடன் வழங்கும் பணி துவங்கியது. இதற்கு அம்மாதம், 31ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. பின், இம்மாதம், 15ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இதுவரை, 2,000 நிறுவனங்களுக்கு, 52 கோடி ரூபாய்க்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. தற்போது, அவகாசம் முடிவடைந்த நிலையிலும், கடன் வழங்கும் பணியை தொடர்ந்து மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.






      Dinamalar
      Follow us