sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கூட்டணி சதி வேலையில் சிக்க மாட்டார் திருமா! அமைச்சர் ரகுபதி உறுதி

/

கூட்டணி சதி வேலையில் சிக்க மாட்டார் திருமா! அமைச்சர் ரகுபதி உறுதி

கூட்டணி சதி வேலையில் சிக்க மாட்டார் திருமா! அமைச்சர் ரகுபதி உறுதி

கூட்டணி சதி வேலையில் சிக்க மாட்டார் திருமா! அமைச்சர் ரகுபதி உறுதி

4


ADDED : நவ 08, 2024 09:09 PM

Google News

ADDED : நவ 08, 2024 09:09 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை: எங்கள் கூட்டணியை பிரிக்க யார் சதி வேலைகளை செய்தாலும் சிக்கமாட்டார்கள். 2026 தேர்தலில் நிச்சயமாக திருமாவளவன் கூட்டணியில் நீடிப்பார் என்று சட்ட அமைச்சர் ரகுபதி கூறி உள்ளார்.

புதுக்கோட்டையில் அவர் நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசுகையில் கூறியதாவது; இ.பி.எஸ்., எப்போதும் பகல் கனவு காண்பவர். அவருடன் கூட்டணி போக யாரும் தயாராக இல்லை. அவரது கனவு பலிக்காது. கூட்டணி ஆட்சி அமையும் என்று அன்புமணி பகல் கனவு காண்கிறார். அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூட்டணியை விட்டு செல்லமாட்டார். 2026ம் ஆண்டு தேர்தலில் இதே கூட்டணி நீடிக்கும். வெற்றி எங்களுடையது, கூட்டணி எங்களுடையது. தொடர்ந்து 2வது முறையாக ஸ்டாலின் முதல்வராவார். புதிய வரலாற்றை உருவாக்கி தருவார்.

விஜய் கட்சி தொடங்கியது பற்றி நாங்கள் கவலைப்படவே இல்லை. நாங்கள் பனங்காட்டு நரி, எதை கண்டும் தி.மு.க., பயப்படாது. அவர் என்ன ஓட்டு வாங்குவார், எவ்வளவு ஓட்டு வங்கி உள்ளது என்பதை எல்லாம் என்பதை தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம்.

தி.மு.க., கூட்டணியில் இருப்பவர்கள் நட்போடும், பாசத்தோடும் இருப்பவர்கள். எந்த சதி வேலை யார் செய்தாலும் அதில் அவர்கள் சிக்க மாட்டார்கள். 2026 தேர்தலில் கூட்டணியில் திருமாவளவன் நிச்சயமாக நீடிப்பார்.

இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்.






      Dinamalar
      Follow us