sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அரசியலை எந்த அறமும் இன்றி வெறும் வியாபாரமாகவே பார்க்கும் இ.பி.எஸ்! செந்தில் பாலாஜி விமர்சனம்

/

அரசியலை எந்த அறமும் இன்றி வெறும் வியாபாரமாகவே பார்க்கும் இ.பி.எஸ்! செந்தில் பாலாஜி விமர்சனம்

அரசியலை எந்த அறமும் இன்றி வெறும் வியாபாரமாகவே பார்க்கும் இ.பி.எஸ்! செந்தில் பாலாஜி விமர்சனம்

அரசியலை எந்த அறமும் இன்றி வெறும் வியாபாரமாகவே பார்க்கும் இ.பி.எஸ்! செந்தில் பாலாஜி விமர்சனம்

6


ADDED : ஜன 22, 2025 11:33 AM

Google News

ADDED : ஜன 22, 2025 11:33 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை; அரசியலை எந்த அறமும் இன்றி வெறும் வியாபாரமாகவே பார்க்கும் இ.பி.எஸ்., என அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;

தரையே தேயும் அளவுக்கு ஊர்ந்து சென்று காலைப் பிடித்து முதல்வராகி, பதவி சுகம் கண்டவுடன் அந்த கால்களையே வாரிவிட்ட இ.பி.எஸ்., அரசியல் விசுவாசம் பற்றி வகுப்பெடுக்கிறார்.

இ.பி.எஸ்., தனிப்பட்ட வகையில் எத்தனை பேருக்கு துரோகம் செய்தார் என்ற கணக்கை கூட விட்டுவிடலாம்; தனது பதவி நிலைத்திருக்க வேண்டும் எனும் சுயநலத்திற்காக தமிழகத்தையே பா.ஜ.,விடம் அடமானம் வைத்தார் என்பதை தமிழக மக்கள் அனைவரும் அறிவர்.

புளிமூட்டையில் ஆரம்பித்து அரசியல் வரை எல்லாவற்றையும் எந்தவொரு அறமும் இன்றி வெறும் வியாபாரமாகவே பார்க்கும் வியாபாரி பழனிசாமி எப்படியான அரசியல் வியாபாரி என்பது அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கு மிக நன்றாக தெரியும்.

அடிமைக் கூட்டத்திற்கு லாவணி பாடாதவர்களுக்கு எல்லாம் ஏதாவதொரு முத்திரை குத்தி அவர்களைக் காலி செய்வதற்காக எந்தவொரு லாபியும் செய்யத் தயங்காத பதவி வியாபாரி பழனிசாமி மற்றவர்களைப் பார்த்து வியாபாரி என்று சொல்வதுதான் நகைமுரண்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






      Dinamalar
      Follow us