sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திருவண்ணாமலையில் நெஞ்சை பிழியும் சோகம்; மண்ணில் புதையுண்ட 7 பேர் உயிரிழப்பு!

/

திருவண்ணாமலையில் நெஞ்சை பிழியும் சோகம்; மண்ணில் புதையுண்ட 7 பேர் உயிரிழப்பு!

திருவண்ணாமலையில் நெஞ்சை பிழியும் சோகம்; மண்ணில் புதையுண்ட 7 பேர் உயிரிழப்பு!

திருவண்ணாமலையில் நெஞ்சை பிழியும் சோகம்; மண்ணில் புதையுண்ட 7 பேர் உயிரிழப்பு!

31


UPDATED : டிச 03, 2024 06:56 AM

ADDED : டிச 02, 2024 05:25 PM

Google News

UPDATED : டிச 03, 2024 06:56 AM ADDED : டிச 02, 2024 05:25 PM

31


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மண்ணில் புதையுண்ட, ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்; அவர்களில் 5 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன; உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைந்து போயிருப்பதை கண்டு, மீட்புக்குழுவினரே கண்ணீர் விட்டனர்.

பெஞ்சல் புயல் தாக்கத்தினால் திருவண்ணாமலையில் பெய்த கனமழையில் அண்ணாமலையார் மலையில் மண் மற்றும் பாறை சரிவு ஏற்பட்டது. இதில் வ.உ.சி. நகரில் 40 டன் எடை கொண்ட பாறை உருண்டு 2 வீடுகள் சேதம் அடைந்தன. பாறை உருண்டு விழுந்ததால் வீடு ஒன்று புதையுண்டது. அந்த வீட்டில் இருந்த ராஜ்குமார், மீனா தம்பதி, அவர்களின் குழந்தைகள் கவுதம், இனியா, பக்கத்து வீட்டு சிறுவர்கள் மகா, வினோதினி, ரம்யா என 7 பேர் சிக்கிக் கொண்டனர்.

சம்பவம் நடந்த நேற்று அங்கு மழை மற்றும் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் மீட்பு பணிகளில் தொய்வும், தாமதமும் ஏற்பட்டது. அவ்வப்போது மழை குறுக்கிட்டபோதிலும் மீட்பு பணி தொடர்ந்து நடந்தது. மாலை 5 மணிக்கு மேல் ஒருவர் சடலம் தென்பட்டது.

அடுத்தடுத்து ஒவ்வொரு சடலமாக மீட்கப்பட்டது. இரவு 8 மணி நிலவரப்படி 5 சடலங்களும், சில உடல் பாகங்களும் மீட்கப்பட்டன. மண் மூடிய நிலையில் சடலங்கள் அனைத்தும் கிடந்தன. இதனால் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று மீட்புக்குழுவினர் வேதனையுடன் தெரிவித்தனர்.

உருக்குலைந்த நிலையில் கிடந்த சடலங்களை கண்டு மீட்புக்குழுவினரும், போலீசாரும் கண்கலங்கினர். ஒரே குடும்பத்தை சேர்ந்த, குழந்தைகள் உள்ளிட்டோர் மண்ணில் புதையுண்டு உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, அங்கு மழை கொட்டியதால் சிறிதுநேரம் மீட்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. பின்னர் மழை விட்டதும், மீட்பு நடவடிக்கைகள் தொடங்கின. இந் நிலையில் மீட்பு பணிகளையும், மண் சரிவு ஏற்பட்ட இடத்தையும் துணை முதல்வர் உதயநிதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். கலெக்டர் பாஸ்கர பாண்டியனிடம் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது; பாறை, மண் சரிவால் இறந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். உண்மையில் மிக துயரமான சம்பவம் நடந்துள்ளது.

எப்படியாவது நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்த்தோம். எஞ்சிய மீட்புப் பணிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us