sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அமைச்சர் கருத்து வருத்தமளிக்கிறது அங்கன்வாடி பணியாளர்கள் வேதனை

/

அமைச்சர் கருத்து வருத்தமளிக்கிறது அங்கன்வாடி பணியாளர்கள் வேதனை

அமைச்சர் கருத்து வருத்தமளிக்கிறது அங்கன்வாடி பணியாளர்கள் வேதனை

அமைச்சர் கருத்து வருத்தமளிக்கிறது அங்கன்வாடி பணியாளர்கள் வேதனை


ADDED : மே 04, 2025 02:24 AM

Google News

ADDED : மே 04, 2025 02:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை:'எங்கள் கோரிக்கைகள் குறித்து, சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் கூறிய கருத்து மன வருத்தத்தை அளிக்கிறது' என, அங்கன்வாடி பணியாளர்கள் தெரிவித்தனர்.

புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலகம் அருகே, 500க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள், நேற்று இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல், நெல்லை உட்பட தமிழகம் முழுதும் நேற்று போராட்டம் நடந்தது.

இந்நிலையில், சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன், 'இந்த போராட்டம் சட்டவிரோதம். போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகளின் நலன் கருதி, போராட்டத்தை அங்கன்வாடி பணியாளர்கள் கைவிட வேண்டும்' என, எச்சரித்திருந்தார்.

நேற்று புதுக்கோட்டையில், அங்கன்வாடி பணியாளர்கள் கூறுகையில், 'சமூகநலத்துறை அமைச்சர் கூறிய கருத்து, எங்களுக்கு மிகுந்த வேதனையை அளித்துள்ளது. குழந்தைகளின் நலன் கருதி என, அவர் அவ்வாறு கூறியிருக்கக்கூடாது.

வெயில் காலத்தில், பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளித்துள்ள வேளையில், அங்கன்வாடிக்கு மட்டும் விடுமுறை அளிக்காமல் இருப்பது ஏற்புடையதல்ல. எங்கள் கோரிக்கையை அரசு ஏற்று, ஒரு மாதம் விடுமுறையை வழங்க வேண்டும்' என்றனர்.






      Dinamalar
      Follow us