உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : செப் 09, 2026 05:14 AM

அ நிறம் | அளவு
த.வெ.க., தலைமையில் சென்னையில் இன்று நடக்கும் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கவில்லை. அதை அவர்களிடம் முறைப்படி சொல்லி விட்டோம். தற்போது, நாங்கள் எந்த கூட்டணியிலும் இல்லை. இரண்டு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்து யாருக்கு ஆதரவு என முடிவை அறிவிப்போம். த.வெ.க.,வை நாங்கள் அலட்சியமாக கருதவில்லை.
சட்டசபையில் முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் உள்ளன. யார் சத்தமாக பேசுகின்றனர் என்ற போட்டி, அங்கு நடக்கவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 'மிசா' என்பது ஜனநாயக விரோத செயல். அப்போது, தி.மு.க., கடுமையான அடக்குமுறைக்கு உள்ளானது. அதை கேலிக்கு உள்ளாக்கக் கூடாது. அதை, யார் செய்தாலும், தவறு தான்.
- வீரபாண்டியன், தமிழக செயலர், இந்திய கம்யூ.,
