sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திருநங்கையருக்கு கவுன்சிலர் பதவி எம்.எல்.ஏ., கோரிக்கை

/

திருநங்கையருக்கு கவுன்சிலர் பதவி எம்.எல்.ஏ., கோரிக்கை

திருநங்கையருக்கு கவுன்சிலர் பதவி எம்.எல்.ஏ., கோரிக்கை

திருநங்கையருக்கு கவுன்சிலர் பதவி எம்.எல்.ஏ., கோரிக்கை


ADDED : ஏப் 17, 2025 12:34 AM

Google News

ADDED : ஏப் 17, 2025 12:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'மாற்றுத்திறனாளிகளை போல, திருநங்கையரையும் உள்ளாட்சி அமைப்புகளில் கவுன்சிலர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, விருத்தாசலம் தொகுதி, காங்., - எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார்.

சட்டசபையில் அவர் பேசியது:

உள்ளாட்சி அமைப்புகளில், மாற்றுத்திறனாளிகளை, நியமன கவுன்சிலர்களாக நியமிக்க, சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது, வரவேற்கத்தக்கது.

அதுபோல, திருநங்கையரையும் நியமன கவுன்சிலர்களாக நியமிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடலுார் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே உறுதி அளித்துள்ளார். அதை செயல்படுத்த வேண்டும்.

விருத்தாசலம் என்ற பெயர் சமஸ்கிருதத்தில் உள்ளது. அதை தமிழில் 'திருமுதுகுன்றம்' என்று பெயர் மாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us