sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை

/

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை

1


ADDED : ஜன 01, 2025 01:26 PM

Google News

ADDED : ஜன 01, 2025 01:26 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'திருநெல்வேலி, கன்னியாகுமரியில் இன்று (ஜன.,01) கனமழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரியில் உறைபனிக்கு வாய்ப்புள்ளது' என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.



இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று (ஜன.,01) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதேபோல், திருநெல்வேலி, கன்னியாகுமரியில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (ஜன.,01) முதல் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறைபனிக்கு வாய்ப்புள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us