sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சென்னை - நாகர்கோவில் ரயிலை வரும் 31ல் துவக்குகிறார் மோடி

/

சென்னை - நாகர்கோவில் ரயிலை வரும் 31ல் துவக்குகிறார் மோடி

சென்னை - நாகர்கோவில் ரயிலை வரும் 31ல் துவக்குகிறார் மோடி

சென்னை - நாகர்கோவில் ரயிலை வரும் 31ல் துவக்குகிறார் மோடி

10


ADDED : ஆக 28, 2024 03:52 AM

Google News

ADDED : ஆக 28, 2024 03:52 AM

10


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : சென்னை - நாகர்கோவில், மதுரை - பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில்களின் சேவையை பிரதமர் மோடி வரும் 31ம் தேதி துவங்கி வைக்கிறார்.

சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில், தெற்கு ரயில்வே முதன்மை தலைமை பணியாளர் நலன் அதிகாரி ஹரி கிருஷ்ணன், முதன்மை நிதி ஆலோசகர் மாலாபிகா கோஷ் மோகன் கூறியதாவது:

சென்னை - - நாகர்கோவில் இடையேயும், மதுரை -- பெங்களூரு இடையேயும் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி விரைவில் துவங்கி வைக்க உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

எங்கெல்லாம் நிற்கும்


பெங்களூரில் வரும் 31ம் தேதி நடக்கும் விழாவில், காணொளி வாயிலாக வந்தே பாரத் ரயில்களின் சேவையை பிரதமர் துவங்கி வைக்க உள்ளார். எழும்பூரில் இருந்து காலை 5:00 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில், மதியம் 1:50க்கு நாகர்கோவிலுக்கு செல்லும்.

நாகர்கோவிலில் இருந்து மதியம் 2:20க்கு புறப்பட்டு இரவு 11:00 மணிக்கு எழும்பூர் வரும்.இந்த ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலியில் நின்று செல்லும்.

மதுரையில் இருந்து காலை, 5:15 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில், மதியம் 1:00க்கு பெங்களூரு கன்டோன்மென்ட் செல்லும்.

பெங்களூரு கன்டோன்மென்டில் இருந்து மதியம் 1:30க்கு புறப்படும் ரயில், இரவு 9:45க்கு மதுரை சென்றடையும். இந்த ரயில், திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரத்தில் நின்று செல்லும்.

'2 மாதத்தில் முடியும்'

சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா கூறுகையில், ''சென்னை கடற்கரை -- எழும்பூர் 4வது புதிய பாதை அமைக்கும் பணி, ஒரு ஆண்டாக நடக்கிறது. நிலம் கையகப்படுத்துவதில் பிரச்னையால் பணியில் தாமதம் ஏற்பட்டது. அனைத்து பணிகளையும் வரும் அக்டோபரில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெரம்பூரில், 4வது ரயில் முனையம் அமைக்க, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய ஓராண்டாகும்,'' என்றார்.








      Dinamalar
      Follow us