முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: எந்த நிறுவனங்கள் எவ்வளவு முதலீடு ஓர் பார்வை!
முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: எந்த நிறுவனங்கள் எவ்வளவு முதலீடு ஓர் பார்வை!
UPDATED : ஜன 07, 2024 07:38 PM
ADDED : ஜன 07, 2024 07:31 PM

சென்னை:இன்று சென்னையில் துவங்கப்பட்ட 3 ஆவது 'உலக முதலீட்டாளர் மாநாடு 2024'-ல் பல சர்வதேச நிறுவனங்கள் தங்களது முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொண்டன.
100 க்கும் மேற்பட்ட நிறுவனங்களால் புரிந்துணர்வு ஒப்பதங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. ஹூண்டாய் நிறுவனம் கூடுதலாக ரூ.6 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது. டாடா பவர் நிறுவனம் தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.55 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிவிஎஸ் குழுமம் ரூ.5 ஆயிரம் கோடி முதலீடு என இன்றைய முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழகத்தில் முதலீடு செய்ய தொழில் நிறுவனங்கள் ஆர்வம் காட்டின. மேலும் பெகட்ரான், மிட்சுபிஷி, ஏ.பி. மோலார் மெர்ஸ்க், ஹுண்டாய், JSW, அசோக் லேலண்ட் மற்றும் வின்பாஸ்ட் ஆகிய முக்கிய நிறுவனங்களின் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
முக்கிய நிறுவனங்கள் எவை என்று பார்ப்போம்
பெகாட்ரான்:
நுகர்வோர் மின்னணு சாதனங்கள் உற்பத்தி மையம் தொடங்கப்படவுள்ளது. முதலீடு ரூ 1,000 கோடி. இதன் மூலம் 8000 பேர் வேலைவாய்ப்பு பெறுவர்.
டாடா எலக்ட்ரானிக்ஸ்:
டாடா எலக்ட்ரானிக்ஸ், செல்போன் உற்பத்தி மையம் கிருஷ்ணகிரியில் நிறுவப்பட உள்ளது. முதலீடு ரூ 12,082 கோடி. இதன் மூலம் 40,500 பேர் வேலைவாய்ப்பு பெறுவர்.
கோத்ரெஜ் நுகர்வோர்:
முதலீடு ரூ 515 கோடி. இதன் மூலம் 446 பேர் வேலைவாய்ப்பு பெறுவர்.
JSW Energy:
JSW Energy (புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள்)
முதலீடு ரூ 10,000 கோடி. இதன் மூலம் வேலை 6,600 பேர் வேலைவாய்ப்பு பெறுவர்.
வின்ஃபாஸ்ட்:
வின்ஃபாஸ்ட் சார்பில் தூத்துக்குடியில் மின்சார வாகனங்கள் உற்பத்தில் மையம் நிறுவப்பட உள்ளது. முதலீடு ரூ 16,000 கோடி.
ஹூண்டாய்:
ஹூண்டாய் மோட்டார்ஸ், காஞ்சிபுரத்தில் மின்சார கார், மின்கலன்கல் உற்பத்தி நிறுவனம். முதலீடு ரூ 6,180 கோடி.
மிட்சுபிஷி:
மிட்சுபிஷி எலெக்ட்ரிக், குளிர்சாதன தயாரிப்பு தொழிற்சாலை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. முதலீடு ரூ 200 கோடி. இதன் மூலம் 50பேர் வேலை வாய்ப்பு பெறுவர்.
குவால்காம்:
குவால்காம், சென்னை வடிவமைப்பு மையம் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. முதலீடு ரூ 177.27 கோடி. இதன் மூலம் 1600 பேர் வேலை வாய்ப்பு பெறுவர்.
டிவிஎஸ் குழுக்கள்:
டிவிஎஸ் குழுக்கள்,தமிழகம் முழுவதும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றவுள்ளது. முதலீடு ரூ 5,000கோடி. இதன் மூலம் 500 பேர் வேலை வாய்ப்பு பெறுவர்.
ஏபி மோலெர் மேர்ஸ்க்:
ஏபி மோலெர் மேர்ஸ்க் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து தீர்வுகள் சார்பில் தமிழகம் முழுவதும் சர்வதேச திறன் மையங்கள் நிறுவப்படவுள்ளது. ஆகிய நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.