ADDED : பிப் 22, 2024 02:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,:சென்னை, டி.எம்.எஸ்., வளாகத்தில், தமிழ்நாடு எம்.ஆர்.பி., செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதாக, 72 பேரை போலீசார் கைது செய்தனர்.
சங்கத்தின் செயலர் சுபின் கூறியதாவது:
தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அளித்தபடி, எம்.ஆர்.பி., நர்ஸ்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்.
எங்கள் கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.