sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வீட்டு வரி பெயர் மாற்ற ரூ.10 ஆயிரம் லஞ்சம்; கையும் களவுமாக சிக்கினார் நகராட்சி அலுவலர்!

/

வீட்டு வரி பெயர் மாற்ற ரூ.10 ஆயிரம் லஞ்சம்; கையும் களவுமாக சிக்கினார் நகராட்சி அலுவலர்!

வீட்டு வரி பெயர் மாற்ற ரூ.10 ஆயிரம் லஞ்சம்; கையும் களவுமாக சிக்கினார் நகராட்சி அலுவலர்!

வீட்டு வரி பெயர் மாற்ற ரூ.10 ஆயிரம் லஞ்சம்; கையும் களவுமாக சிக்கினார் நகராட்சி அலுவலர்!

23


ADDED : ஜூலை 29, 2025 08:02 PM

Google News

ADDED : ஜூலை 29, 2025 08:02 PM

23


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், வீட்டு வரி பெயர் மாற்றம் செய்வதற்காக ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டு, முதல் கட்டமாக ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி வருவாய் உதவியாளர் நவீனா, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊரணி தெருவை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி காளீஸ்வரி. காளீஸ்வரியின் தந்தை துரை கண்ணன் தனது மகள் காளீஸ்வரி பெயருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு சொத்துக்களை எழுதி தந்துள்ளார். அதன்படி காளீஸ்வரி பெயருக்கு வீட்டு வரி பெயர் மாற்றம் செய்வதற்கு காளீஸ்வரியின் கணவர் செல்வ குமார் நகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு உள்ளார்.

அங்கிருந்த வருவாய் உதவியாளர் நவீனா என்பவர் பெயர் மாற்றம் செய்வதற்கு உயர் அதிகாரிகள் தெரிவித்தபடி 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர கேட்டுள்ளார். முதல் கட்டமாக பத்தாயிரம் ரூபாய் தர வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் லஞ்சம் கொடுத்து பெயர் மாற்றம் செய்வதில் உடன்பாடு இல்லாத செல்வகுமார், தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு போலீசிடம் புகார் அளித்தார் .

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பீட்டர் பால் துரை, இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி, எஸ்.ஐ. தளவாய் மற்றும் சுந்தரவேல், பாண்டி, கோமதி, முத்து, ஷியாம் உள்ளிட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்துக்கு வருகை தந்து மறைந்திருந்து நோட்டமிட்டனர்.

மேலும் செல்வகுமாரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்தனுப்பிய ரசாயன பவுடர் தடவிய பத்தாயிரம் ரூபாயை பில் கலெக்டர் நவீனா வாங்கிக்கொண்டார். செல்வகுமாரிடமிருந்து லஞ்சப்பணத்தை அவர் பெற்றபோது போலீசார் கையும் களவுமாக சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது வருவாய் உதவியாளர் நவீனா கண்ணீர் விட்டு அழுது, 'உயர் அதிகாரிகள் சொன்னதால்தான் வாங்கினேன்' என தெரிவித்துள்ளார்.

லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி பீட்டர் பால் துரை தலைமையிலான போலீசார் வருவாய் உதவியாளர் நவீனாவை கைது செய்து, லஞ்சத்தில் பங்கு வாங்கும் உயர் அதிகாரிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us